மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் மேலும் ஒரு தீ விபத்து: 4 பேர் பரிதாபமாக மரணம்..!


மும்பையின் மரோல் பகுதியில் உள்ள மைமூன் என்ற அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது தளத்தில் நேற்று பின்னிரவு திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த தீ அணைப்பு துறையினர் கடுமையாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பின்னர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த தீ விபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். 7 பேர் காயம் அடைந்தனர். 11 பேரை தீயணைப்பு படையினர் பத்திரமாக மீட்டுள்ளனர். தீ விபத்தில் காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள கூப்பர் மற்றும் முகுந்த் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மின்கசிவுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மும்பையில் ஒரு வாரத்தில் நடந்த இரண்டாவது தீ விபத்து இதுவாகும். கடந்த வெள்ளிக்கிழமை இரவு கமலா மில் வளாகத்தில் உள்ள உணவகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.-Source: Vikatan

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!