சாவிலும் இணை பிரியாமல் சென்ற தம்பதி… நெகிழ்ச்சியில் கிராம மக்கள்.!


கலசபாக்கம் அருகே இணை பிரியாமல் வாழ்ந்து வந்த தம்பதி சாவிலும் இணை பிரியாததை கண்டு கிராம மக்களை ஆச்சரியபட வைத்தது.

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த பட்டியேந்தலை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது95). இவரது மனைவி வீரகங்கா (87) திருமணம் ஆனது முதல் தம்பதிகள் பிரியமுடன் வாழ்ந்து வந்தனர்.

தம்பதிக்கு காளி என்ற மகன், மருமகள் இருந்தனர். அவர்களது பேத்தி பிளஸ்-2 படித்து வருகிறார். மகனும் மருமகளும் கடந்த 5 ஆண்டுக்குமுன் இறந்து விட்டனர். இதனால் பேத்தியை ஜெயராமன் தம்பதியினர் வளர்த்து வந்தனர்.

இந்த நிலையில் ஜெயராமனுக்கு உடல் நல குறைவு ஏற்பட்டது. அவரது மனைவி வீரகங்கா கணவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று கவனித்து வந்தார். நேற்று மதியம் ஜெயராமன் உடல் நிலை குறைவு காரணமாக இறந்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த வீரகங்கா கணவரது உடலை பார்த்து கதறி அழுதார். கட்டி அணைத்தவாறு ஜெயராமன் உடல் மீது சாய்ந்திருந்தார்.

அப்போது மூச்சுபேச்சு இல்லாமல் இருந்ததால் அங்கிருந்த உறவினர்கள் வீரகங்காவை எழுப்ப முயன்றனர். அப்போது வீரகங்கா இறந்தது தெரியவந்தது. இதனால் அங்கிருந்த உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இணை பிரியாமல் வாழ்ந்து வந்த தம்பதி சாவிலும் இணை பிரியாததை கண்டு கிராம மக்கள் ஆச்சரியபட்டனர்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!