7 தமிழர் விடுதலை… கவர்னருக்கு அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்- தினகரன்


7 பேரை விடுதலை செய்ய கவர்னருக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ராஜீவ் கொலையாளிகள் 7 பேர் விடுதலை குறித்து தமிழக கவர்னர் முடிவு எடுக்கலாம் என்று சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

ஏழு தமிழர் விடுதலை குறித்து தமிழக ஆளுநர் சுதந்திரமாக முடிவெடுக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ள நிலையில், இதற்கு மேலும் இவ்விகாரத்தை இழுத்தடிக்கக்கூடாது.

ஏழு பேரை விடுதலை செய்ளுயும் கோப்பை தன்னிடம் ஓராண்டிற்கும் மேலாக வைத்திருக்கும் ஆளுநர் உடனடியாக அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்.

தமிழக அரசுக்கு உண்மையிலேயே அக்கறை இருக்குமானால் ஆளுநருக்கு உரிய அழுத்தம் கொடுத்து இவர்களின் விடுதலைக்காக தமிழக அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்துக்கு உடனடியாக ஒப்புதல் பெற வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!