குழந்தை பாக்கியம் கிடைக்காம போவதற்கு காரணம்..? உடல்நிலை, வாழ்க்கைமுறை, உணவுப் பழக்க வழக்கம்னு பல விஷயங்கள் கூறிக்கொண்டே போகலாம்
முக்கிய காரணம், மாதவிலக்குக் கோளாறுகள் இருந்தாலும்கூட கருத்தரிக்கறதுல சிக்கல் வரும்.
மாதவிலக்கு கோளாறுதான் காரணம் என்று கண்டறிந்து விட்டால் இனி பிரச்சனை சுலபம்.. அந்தக் கோளாறு நீங்கி, கருத்தரிக்கறதுக்கு இயற்கை வைத்தியமுறைகள் உள்ளது. அது குறித்து பார்க்கலாம்.
அரை லிட்டர் பசும்பால்ல, கால் கிலோ மலைப் பூண்டை உரிச்சுப் போட்டு வேக வையுங்க. கலவை நல்லா சுண்டி ஜெல் அல்லது அல்வா பதத்துக்கு வந்ததும், தேவையான அளவு கற்கண்டு அல்லது பனங்கற்கண்டு போட்டு கிளறி இறக்குங்க.
மாதவிலக்கான நாட்களிலிருந்து ஒரு வாரத்துக்கு தினமும் காலையில் வெறும் வயிற்றில் இதைச் சாப்பிடுங்க..பிறகு பாருங்க..
இன்னொரு வைத்தியமும் இருக்கு..?
பசும் மஞ்சளை அரைச்சு எடுத்த சாறு, மலை வேம்பு சாறு, நல்லெண்ணெய் என இது எல்லாத்தையும் சம அளவு எடுத்து கலந்து வெச்சுக்குங்க.
மாதவிலக்கான முதல் 3 நாட்களில் காலை,மாலை என இரண்டு வேளையும் இரண்டு டேபிள்ஸ்பூன் சாப்பிடணும். நிறைய பெண்கள் இதன் மூலம் பலன் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது
உடம்புல ஊளைச் சதை அதிகம் இருந்தாலும் கரு உண்டாவதில் சிரமம் ஏற்படும். தினமும் சின்ன வெங்காயத்தை பச்சையா சாப்பிடுங்க, இந்த ஊளைச் சதை குறையும்.-Source: seithipunal
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!