இரும்புக் கம்பியால் அடித்து 6 பேரை கொடூரமாக கொன்ற ராணுவ வீரர்… பின்ணனியில் அதிர்ச்சி..!


அரியானா மாநிலம் பால்வால் நகரில் மர்ம நபர் இரும்பு கம்பியால் பலரை கொலை செய்துள்ளார். இதை சிசிடிவி மூலம் கண்டுபிடித்த போலீசார் அவரை கைது செய்தனர். அவர் குறித்து நடத்திய விசாரணையில் கொலையாளி முன்னாள் ராணுவ வீரர் என்பது தெரிய வந்தது. அவர் சிறிது மனநலம் பாதிக்கப்பட்டவர்.

இன்று அதிகாலையில் இந்த கோர சம்பவம் நடந்துள்ளது. 2 மணி நேரத்திற்குள் மூன்று வாட்ச்மேன்கள் மற்றும் ஒரு பெண் உட்பட 6 பேரை அவர் அடித்துக் கொன்றுள்ளார். கொலைக்காக காரணம் இன்னும் கண்டறியப்பட வில்லை. கைது செய்ய முயன்ற போது நரேசுக்கும், போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் நரேஷ் படுகாயமடைந்தார்.

இரக்கமின்றி 6 பேர் இரும்பு கம்பியால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.-
Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!