நிர்பயா கொலை வழக்கில் குற்றவாளிகளில் ஒருவரான வினய் சர்மா உச்சநீதிமன்றத்தில் புதியதாக சீராய்வு மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
நாட்டை உலுக்கிய நிர்பயா வழக்கில் முகேஷ், பவன்குப்தா, வினய் சர்மா, அக்ஷ்யகுமார் சிங் ஆகியோருக்கு வரும் 22-ந் தேதி காலை 7 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் குற்றவாளிகளில் ஒருவரான வினய் சர்மா, உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அதில், குற்றம் நிகழ்ந்த போது தமக்கு 19 வயதுதான். ஏற்கனவே பலாத்கார வழக்குகளில் 17 சிறார்களுக்கான தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக்கபட்டுள்ளது.
அதேபோல் தமக்கும் கருணை காட்ட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இதன் மீதான விசாரணை விரைவில் நடைபெற உள்ளது.-source: oneindia
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!