ரஜினிகாந்த் வருவதால்.. திராவிட கட்சிகளுக்கு ஒரு பாதிப்பும் இல்லை – அமைச்சர் கடம்பூர் ராஜூ..!


கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கடம்பூர் ராஜு கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், டி.டி.வி.தினகரன் போன்றவர்கள் அ.தி.மு.க. ஆட்சி 2 அல்லது 3 மாதங்களில் கலைந்து விடும் என்று கூறி வருகின்றனர். வழக்கமாக எதிர் கட்சியினர் கூறுவதையே இவர்களும் கூறி வருகின்றனர்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த ஆட்சி வருகிற 2021-ம் ஆண்டுக்கு பின்னரும் சிறப்பாக தொடரும்.

சிஸ்டம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் சொல்வதற்குகூட தெரியாதவர்கள் எல்லாம் அரசியலில் ஆழம் பார்க்க நினைக்கிறார்கள். இதுவரை ஆழம் பார்க்க நினைத்த திரைப்படத்துறையினர் புரட்சித் தலைவரை நினைத்து புலியைப் பார்த்து பூனை சூடு போட்ட கதை தான் தமிழகத்தில் ஏற்படும்.

தமிழகத்தில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதால், திராவிட கட்சிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை. திராவிட கட்சிகள் தான் எப்போதும் ஆட்சியில் இருக்கும். தமிழகத்தில் இதுவரை நடந்த அனைத்துத் தேர்தல்களிலும் இது நிரூபிக்கப்பட்டுள்ளது.

திராவிட பாரம்பரியம் மிக்க மண்தான் நமது தமிழகம். திராவிடத்திற்கு மாற்றாக எந்தக் கட்சியும் தமிழகத்தில் ஆட்சிக்கு வருவது இங்கு சாத்தியமில்லை. ரஜினிகாந்த் நினைத்தது நடக்காது.

இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜு கூறினார்.- Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!