ஏர்ப்போர்ட்டில் ரசிகருடன் கேக் வெட்டி கொண்டாடிய பிரபல நடிகை..!


பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் தீபிகா படுகோனே, ஏர்ப்போர்ட்டில் ரசிகருடன் கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார்.

பாலிவுட்டில் கலக்கி வரும் தீபிகா படுகோனுக்கு நேற்று 34வது பிறந்த நாள். ஓம் சாந்தி ஓம், சென்னை எக்ஸ்பிரஸ், ராம் லீலா, பத்மாவத் என பல படங்களில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி பாலிவுட்டின் நம்பர் ஒன் நாயகியாக வலம் வருகிறார் தீபிகா.

ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட லக்‌ஷ்மியின் கதையை அடிப்படையாகக் கொண்டு சபாக் எனும் படத்தில் தீபிகா படுகோனே நடித்துள்ளார். வரும் ஜனவரி 10ம் தேதி சபாக் திரைப்படம் ரிலீசாகிறது. அந்த படத்திற்கான புரொமோஷன் வேலைகளில் படுபிசியாக பல இடங்களுக்கு சுற்றி திரிந்து வருகிறார் தீபிகா படுகோனே.

வின் டீஸல் நடிப்பில் வெளியான டிரிப்பிள் எக்ஸ் 3 படத்தில் நாயகியாக நடித்த தீபிகா படுகோனே, டிரிப்பிள் எக்ஸ் 4ம் பாகத்திலும் அவருக்கு ஜோடியாக நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவின் 34வது பிறந்த நாளை மும்பையில் கொண்டாட அவரும் அவரது கணவர் மற்றும் நடிகரான ரன்வீர் சிங் இருவரும் மும்பை விமான நிலையத்திற்கு அதிகாலை வந்து இறங்கினர்.

தீபிகா படுகோனே வருவதை முன்னதாக அறிந்திருந்த பத்திரிகையாளர் மற்றும் புகைப்படக் கலைஞர்கள் அவர்களை பேட்டி எடுக்க ஏர்ப்போர்ட்டில் காத்திருந்தனர். அப்போது, அவருக்காக காத்திருந்த ஒரு புகைப்படக் கலைஞர் சர்ப்ரைஸாக கேக் ஒன்றை தீபிகா படுகோனே வந்து இறங்கியதும் நீட்டினார்.

அந்த புகைப்படக் கலைஞரின் அன்பை பார்த்து ஆச்சர்யமடைந்த தீபிகா படுகோனே, ஏர்போர்ட்டிலே கேக் வெட்டி தனது பிறந்த நாளை கொண்டாடினார். தீபிகாவின் இந்த செயல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பிறந்த நாள் வாழ்த்துக்களுடன் ரசிகர் ஒருவர் கேக்கை வெட்டி பிறந்த நாளை கொண்டாடிய தீபிகாவுக்கு பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!