தினமும் 11 முறை உச்சரிங்க…. கெட்ட சக்தியை விரட்டும் அய்யனார் மந்திரம்


அய்யனாரை மனதார நினைத்து இந்த மந்திரத்தை தினம்தோறும் 11 முறை உச்சரித்து வரும்பொழுது நம்மை எந்த கெட்ட சக்தியும் அண்டாது.

அய்யனாரை பார்ப்பதற்கு அச்சுறுத்தும் வகையில் தோற்றம் இருந்தாலும், அவரை மனதார வேண்டி கொண்டு நாம் தொடங்கும் காரியமானது எந்த தடைகளும் இல்லாமல் வெற்றியில் முடியும். அதுமட்டுமல்லாமல் இவர் கிராமங்களில் காவல் தெய்வமாகவும் இருக்கின்றார். காவல் தெய்வமாக ஊர் எல்லையில் இருந்து கிராம மக்களை எல்லாம் காக்கும் இந்த அய்யனாரின் அருளை முழுமையாகப் பெறுவதற்கு ‘அய்யனார் மூல மந்திரத்தை’ உச்சரிப்பது மேலும் அதிக பலனை கொடுக்கும்.

ஓம் கிராமபாலாய வித்மஹே

கிலேஸ நாஸாய தீமஹி
தன்னோ சாஸ்த்ரு ப்ரசோதயாத்

அய்யனாரை மனதார நினைத்து இந்த மந்திரத்தை தினம்தோறும் 11 முறை உச்சரித்து வரும்பொழுது நம்மை எந்த கெட்ட சக்தியும் அண்டாது. மனோதைரியமானது அதிகமாகும். அய்யனாரை தொடர்ந்து வழிபட்டு வர நம் வீட்டையும், நம் வீட்டைச் சேர்ந்த மக்களையும் பேய், பிசாசு, காத்து, கருப்பு கூட அண்டாது என்பது நம்பிக்கை. வீரத்தையும், துணிச்சலையும், அடையாளமாக கொண்டிருக்கும் அய்யனாரின் அருளை முழுமையாகப் பெற இந்த மூல மந்திரத்தை தொடர்ந்து உச்சரிப்போம்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!