அபிஷேக் பச்சன் – ஐஸ்வர்யா ராய் தம்பதியின் மகள் ஆராத்யாவின் பள்ளி ஆண்டு விழா கொண்டாட்டம் சமீபத்தில் நடைபெற்றது. திருபாய் அம்பானி பள்ளியில் படிக்கும் அவரின் ஆண்டுவிழா கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள அமிதாப் பச்சன், ஷாருக்கான், தபு என ஒரு நடச்சத்திர பட்டாளமே வந்திருந்தது.
the proudest moment and voice .. of the girl child .. of Aaradhya , my own .. https://t.co/Gsa9gBIgBA
— Amitabh Bachchan (@SrBachchan) December 22, 2019
இந்நிகழ்ச்சியில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு தொடர்பாக ஆராத்யா பேசினார். தங்கள் மகளின் முதல் மேடை பேச்சை கண்டு உள்ளம் பூரித்துப்போன அபிஷேக் பச்சன் – ஐஸ்வர்யா ராய் தம்பதி அதை செல்போனில் வீடியோவாக எடுத்தனர். நடிகர் ஷாரூக்கானும் அதை வீடியோவாக பதிவு செய்தார்.
இதுகுறித்து அமிதாப் பச்சன் தனது டிவிட்டர் பக்கத்தில், பேத்தியின் பேச்சால் பெருமை கொள்கிறேன் என்று பதிவிட்டு நெகிழ்ந்துள்ளார். இந்த வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகிறது.-Source: top.tamil
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!