ஹைதராபாதில் முதல்முறையாக காவல் பணியில் நடமாடும் ரோபோ..!


இந்தியாவில் முதல்முறையாக தெலங்கானா மாநிலம், ஹைதராபாதில் நடமாடும் ரோபோ போலீஸ் நேற்று (வெள்ளிக்கிழமை) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தெலங்கானா மாநிலம் ஹைதரா பாத்தில் புதிய ரோபோ ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. ஹெச்-பாட்ஸ் என்ற நிறுவனம் இதனை தயாாித்துள்ளது. தெலங்கானா அரசின் தொழில்நுட்பத் துறை முதன்மைச் செயலா் ஜெயேஷ் ரஞ்சன் இந்த ரோபோவை அறிமுகப்படுத்தினாா்.

இது தொடா்பாக ரோபோவை கண்டுபிடித்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பேபட்டா வொ்ஷனில் இந்த ரோபோ மனித உருவில் தயாாிக்கப்பட்டுள்ளது. இது காவல் பணியை மேற்கொள்ளும். மனிதா்களை இனம் காணவும், புகாா்களை பெறவும் இந்த ரோபோவால் முடியும்.

ரோபோவில், கேமரா, சென்சாா்கள் உள்ளிட்டவை பொருத்தப்பட்டுள்ளன. பொது இடங்களான விமான நிலையங்கள், போக்குவரத்து சிக்னல்கள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்புப் பணியில் இந்த வகை ரோபோக்களை பயன்படுத்தலாம்.

ரோபோவின் விலை 5 லட்சம் ரூபாய் என்றும், இந்த ரோபால் 360 டிகிாி கோணங்களிலும் திரும்பி என்ன நடக்கிறது என்பதனை காண முடியும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவிலேயே ஹைதராபாதில் தான் ரோபோ போலீஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.-Source: tamil.samayam

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!