படியில் தடுக்கி விழுந்த மோடி… உத்தரபிரதேச அரசு அதிரடி உத்தரவு..!


மோடி தடுக்கி விழுந்த படியை இடிக்க உத்தரபிரதேச அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளது.

கங்கை நதியை தூய்மைப்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட தேசிய கவுன்சிலின் முதல் கூட்டம் உத்திரபிரதேசம் கான்பூரில் கடந்த 14-ம் தேதி நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி கூட்டம் முடிந்து கங்கை நதியில் படகுப் பயணம் செய்து திரும்பிய பின்னர் படி ஏறும்போது சீரற்ற படியால் கால் தடுமாறி கீழே விழுந்தார்.

உடனே அவருடன் இருந்த பாதுகாப்பு அதிகாரிகள் அவரைப் பிடித்து உதவி செய்தனர். இதில் அவருக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை. அவர் தடுக்கி விழுந்த படி மட்டும் மற்ற படிகளை விட உயரமாக இருந்து உள்ளது இதனால் அவர் தடுக்கி விழுந்தார்.

இந்நிலையில் அந்தப் படிகட்டுகளை இடித்துவிட்டுக் சீரமைக்க உத்திரபிரதேச அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து அம்மண்டல கமிஷனர் பாப்டே கூறுகையில் “ பிரதமர் தடுக்கி விழுந்த படி மட்டும் மற்ற படிகட்டுகளைக் காட்டிலும் வேறுபட்டு இருக்கும். உயரம் சற்று உயரமாக இருக்கும். இதற்கு முன்னர் வேறு சிலரும் அதே படியில் தடுமாறி விழுந்துள்ளனர். எனவே விரைந்து அந்த படியை மட்டும் இடித்து சரியான உயரத்தில் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது “ என்றார்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!