நடிகர் அஜித்தின் திருவான்மையூர் வீட்டில் வனத்துறையினர் ரைடு..!


சென்னை திருவான்மியூரில் உள்ள நடிகர் அஜித்குமார் வீட்டில் வனத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். நடிகர் அஜித்குமார் மேனேஜராக இருப்பவர் சுரேஷ் சந்திரா. அவரது உதவியாளர் நாசர். இவர்கள் இருவரும் மலைப்பாம்பு ஒன்றை ரகசியமாக வளர்த்து வந்தனர். 3 அடி நீளமுள்ள இந்த பாம்பு 7 முதல் 8 அடி வரை வளருமாம்.

இந்த விஷயம் சமீபத்தில் லீக் ஆனது. இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் அவர்களிடமிருந்து பாம்பை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டிருக்கின்றனர். வழக்கும் பதிவு செய்யப்பட்டிருக்கிறதாம். இந்நிலையில் நடிகர் அஜித்குமார் வீட்டில் வனத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.-Source: dinakaran

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!