கணவனுக்கு தங்கையை திருமணம் செய்து கொடுத்த மனைவி… பின்னணியில் நடந்த சுவாரஸ்யம்..!


தாலி கட்டிய கணவனுக்கு மனைவியே தங்கையை திருமணம் செய்துவைத்துள்ள சுவாரஷ்ய சம்பவம் மத்தியபிரதேச மாநிலத்தில் நடந்தேறியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த திலீப் என்பவர் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பாக வினிதா என்பவரை திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் திலீப் தன்னுடைய மனைவி வினிதாவிடம், அவருடைய உறவு பெண்ணான ரச்னா என்பவரை நீண்ட காலமாக விரும்புவதாகவும், அவரை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாகவும் கூறியுள்ளார்.

இதற்கு வினிதா சம்மதம் கூறியதை அடுத்து, ஒரே மேடையில் ரச்னா மற்றும் தனது மனைவியுடன் மாலை மாற்றி திலீப் திருமணம் செய்துள்ளார்.

இதுகுறித்து வினிதா கூறுகையில், சில ஆண்டுகளாகவே நான் உடல்நிலை சரியில்லாமல் இருந்து வருவதால் என்னுடைய கணவர் தான் குழந்தைகளை கவனித்து வருகிறார்.

வேறு ஒரு பெண்ணை அவருக்கு திருமணம் செய்து வைத்தால் குழந்தைகளை நன்றாக கவனித்து கொள்ள மாட்டார்கள். என்னுடைய தங்கையை திருமணம் செய்துவைத்தால் நன்றாக பார்த்துக்கொள்வார் என்பதாலே திருமணம் செய்துவைத்தேன் என்றார்.-Source: lankasri

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!