வயிற்றில் இருக்கும் குழந்தை உதைக்கவில்லையா..? இப்படி மட்டும் செய்யுங்க..!


பல கனவுகளை சுமந்த படி தன்னுள்ளே ஓர் உயிரை சுமக்கும் தாய்மார்களுக்கு அந்த ஒன்பது மாதங்கள் மிகவும் உணர்வுப் பூர்வமானது. முதல் மாதம் முடிந்ததும் லேசாக வயிறு துடிப்பதை உணர முடியும். குழந்தை உருவானதும் முதலில் உருவாகும் உறுப்பு இதயம் தான். ஒன்றாம் மாதம் முடிவிலிருந்து குழந்தையின் இதயம் துடிப்பதை நன்றாக உணர முடியும். அதன் பின்னர் ஐந்தாம் மாதத்திலிருந்து முழு குழந்தை அசைவது, உதைப்பது போன்றவற்றை உணர்வார்கள். சிலருக்கு இந்த அறிகுறிகள் முன்னே பின்னே உணரலாம்.

சிலருக்கு இந்த உணர்வுகள் எதுவுமே இருக்காது. உள்ளே குழந்தை அசைவது,உதைப்பது போன்ற எந்த அறிகுறியும் தெரியவில்லை என்று சொல்லி கர்ப்பிணிகள் பயந்து கொண்டு இருப்பார்கள். ஒரு வேளை உள்ளே இருக்கும் குழந்தைக்கு எதாவது ஆகிவிட்டதா? அல்லது குழந்தையின் வளர்ச்சியில் ஏதேனும் பாதிப்பு உண்டாகியிருக்குமா என்றெல்லாம் வீணாக பயப்படாதீர்கள்.

வயிற்றுக்குள் இருக்கும் குழந்தையின் அசைவுகள் குறைவதற்கு பல காரணங்கள் இருக்கிறது. ஏழாம் மாதம் வரையிலும் எந்த அசைவுகள் தெரியவில்லை என்றால் கூட நீங்கள் பதற்றமடைய வேண்டாம்.

ஏழு மாதம் முழுமையடைந்த பிறகே குழந்தை உதைப்பது, அசைவது போன்ற சேட்டைகளில் ஈடுபடும். அரை மணி நேரம் அமைதியாகவும் அரை மணி நேரம் விளையாடவும் செய்யும்.


குழந்தையை சுமக்கும் பெண்களின் அன்றாட பழக்கங்களில் கூட இதற்கு ஒரு காரணமாக அமைந்திடும். கர்ப்பப்பையில் இருக்கிற அம்னியாடிக் நீரின் அளவு அதாவது தண்ணீர் குடம் நீர் அளவு பொருத்தும் இந்த அசைவுகள் ஒவ்வொருவருக்கும் வேறுபடும். சிலருக்கு மிகவும் லைட்டாக உன்னிப்பாக கவனித்தால் மட்டும் தெரிந்திடும் சிலருக்கோ தங்கள் செய்து கொண்டிருக்கிற வேலை தொடர முடியாத வகையில் குழந்தையின் அசைவு அன்புத் தொந்தரவைக் கொடுக்கும்.

குழந்தை வளர வளர கிட்டதட்ட எட்டாம் மாதம் நெருங்கும் மாதத்திலிருந்து குழந்தையின்அசைவு படிப்படியாக குறைந்திடும். குழந்தை மெல்லச் சுற்றி வெளியே வருவதற்கு ஏதுவாக அசைந்திடும். இதனாலும் மாதம் அதிகரிக்கும் போது குழந்தையின் அசைவு மெல்லக் குறையும்.

இந்த அசைவுகள் எல்லாமே குழந்தையின் வளர்ச்சியுடன் தான் எப்போதும் ஒப்பிடப்படுகிறது. அதனாலேயே பெரும்பாலான தாய்மார்கள் குழந்தையின் அசைவு தெரியவில்லை என்று சொன்னால் குழந்தை வளர்ச்சியில்லையோ என்று பயப்படுகிறார்கள். முதலில் இப்படியான தப்பான அபிப்ராயங்கள் கேட்பதை தவிர்த்து தேவையின்றி பயப்படாதீர்கள்.


இந்த நேரத்தில் தாய்மார்களின் உடலில் ஏகப்பட்ட ஹார்மோன் மாற்றங்கள் நிகழும். அதோடு உள்ளே ஓர் உயிர் இருக்கிறது என்ற உணர்வே உங்களுக்கு பதற்றத்தை உண்டாக்கிடும். சில நேரங்களில் வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், நீர்ச்சத்து குறைபாடு ஆகியவை ஏற்பட்டு சோர்வாக இருக்கும் போது கூட உங்களால் குழந்தையின் அசைவுகளை உணர முடியாது.

அமைதியாக நீங்கள் நிதானமாக இருக்கும் போது வயிற்றுக்கு லேசாக மசாஜ் கொடுத்திடுங்கள். சிலருக்கு வயிற்றில் அதிகமாக அரிக்கும். குழந்தைக்கு அதிக முடியிருந்தால் இப்படி அரிக்கும் என்பார்கள். இந்த சூழ்நிலையில் உங்களால் தாங்கிக் கொள்ள முடிகிற சூட்டில் தண்ணீர் ஒத்தடம் கொடுங்கள். இது அரிப்பை கட்டுப்படுத்துவதுடன். குழந்தைக்கும் கதகதப்பான உணர்வை அதிகரிக்கச் செய்திடும்.-Source: tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!