கைலாசாவுக்கு விசா கிடைக்குமா..? ட்விட்டரில் அஸ்வின், சதீஷ் கலகல


நித்யானந்தாவின் தனி நாடான கைலாசாவுக்கு செல்ல விசா கிடைக்குமா என்று கிரிக்கெட் வீரர் அஸ்வின் கேட்டதற்கு நடிகர் சதீஷ் செம பதில் அளித்துள்ளார்.
நித்யானந்தா கைலாசா

சர்ச்சைகளுக்கு பெயர் போன நித்யானந்தா தனது ஆசிரமத்தில் பக்தைகளை ஆன்மீகத்தின் பெயரில் பலாத்காரம் செய்து அடைத்து வைத்துள்ளதாக புகார்கள் உள்ளன. மேலும் பெண்களை அவர்களின் விருப்பத்திற்கு மாறாக ஆசிரமத்தில் வைத்துள்ளதாக பெற்றோர்கள் சிலர் புகார் தெரிவித்துள்ளனர். இதனால் எந்நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்று பயந்த நித்யானந்தா இந்தியாவை விட்டு தப்பியோடிவிட்டார். தென் அமெரிக்காவில் உள்ள ஈக்வடாரில் இருக்கும் தீவு ஒன்றில் கைலாசா என்கிற தனி நாடை உருவாக்கியுள்ளார். உலகின் மிகச் சிறந்த மற்றும் தூய்மையான நாடு இந்த கைலாசா தான் என்று நித்யானந்தா தெரிவித்துள்ளார்.

நித்யானந்தாவின் கைலாசாவை பற்றி தான் சமூக வலைதளங்களில் ஆளாளுக்கு கிண்டல் செய்து கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் கிரிக்கெட் வீரர் அஸ்வின் ரவிச்சந்திரனோ கைலாசாவுக்கு செல்ல விசா எப்படி பெறுவது என்று கேட்டு ட்வீட் போட்டுள்ளார். அதாவது முன்பே விசா வாங்க வேண்டுமா அல்லது அந்த இடத்தை அடைந்த பிறகு வாங்கினால் போதுமா என்று அஸ்வின் கேட்டுள்ளார்.

அஸ்வினின் ட்வீட்ட பார்த்த பாடகர் ஸ்ரீனிவாஸ், உள்ளே செல்வது எளிது ஆனால் வெளியே வருவது கடினம் என்று பதில் அளித்துள்ளார். அதற்கு அஸ்வினோ, இந்த நாட்டில் முதலீடு செய்தால் மக்களுக்கு ஏதாவது நன்மை கிடைக்குமா என்று கேட்டு விழுந்து விழுந்து சிரிக்கும் ஸ்மைலியை போட்டுள்ளார். அஸ்வின் மட்டும் அல்ல நெட்டிசன்கள் அனைவரும் இந்த கைலாசாவை தான் கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

அஸ்வின் போட்ட ட்வீட்டை பார்த்த நகைச்சுவை நடிகர் சதீஷ் தான் நித்யானந்தா கெட்டப்பில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு சொல்கிறேன் பக்தா என்று கலாய்த்துள்ளார். என்ன சதீஷ் கல்யாணம் நிச்சயமாகியுள்ள நேரத்தில் இப்படி நித்தியானந்தாவாக மாறிவிட்டீர்கள், கைலாசாவுக்கு சென்றால் திரும்ப முடியாது தெரியும்ல என்று சமூக வலைதளவாசிகள் தெரிவித்துள்ளனர்.

கைலாசாவுக்கு செல்ல நீங்கள் அஸ்வினா இருந்தால் முடியாது, அஸ்வினியாக மாற வேண்டும் என்று நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர். பக்தைகளுக்கு மட்டுமே விசா கொடுத்து தன் புது நாட்டில் குடியமர்த்துவார் நித்யானந்தா என்பது நெட்டிசன்களின் கருத்து.-Source: samayam

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!