கடலூர் அருகே 3 அடி உயரம் கொண்ட மணமக்களுக்கு திருமணம்..!


கடலூர் அருகே 3 அடி உயரம் கொண்ட மணமக்களுக்கு பு.முட்லூர் கிராமத்தில் உள்ள புற்று மாரியம்மன் கோவிலில் திருமணம் நடைபெற்றது.

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள மஞ்சக்குழி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவருடைய மகன் ஜெயபிரகாஷ் (வயது 28). மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். 3½ அடி உயரமே கொண்ட இவருக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்தனர். இவரைப்போல் உயரம் குறைந்த பெண்ணை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர்.

இந்த நிலையில் ஜெயபிரகாசுக்கு திண்டுக்கல் மாவட்டம் மொட்டணம்பட்டி கிராமத்தை சேர்ந்த வீராசாமி மகள் கலைச்செல்வியை மணம் முடிக்க முடிவு செய்தனர். அவர் 3 அடி உயரம் மட்டுமே இருந்தார். இதையடுத்து இவர்களது திருமணம் பு.முட்லூர் கிராமத்தில் உள்ள புற்று மாரியம்மன் கோவிலில் நடைபெற்றது. மணமக்களை இருவீட்டார் மற்றும் நண்பர்கள், உறவினர்கள் வாழ்த்தினர்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!