ஊசி போட்டுக் கொண்டு உயிர் விட்ட இளம் பெண் டாக்டர்! அதிர வைக்கும் காரணம்!


கணவர், மாமனார் மற்றும் மாமியார் கொடுமை செய்ததால் தனித்து வாழ்ந்து வந்த பெண் மருத்துவர் விஷ ஊசிப் போட்டுக்குகொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவரான ஷிகர்மூர், கடந்த ஆண்டு சோனம் மோட்டீஸ் என்ற பெண்ணை கரம்பிடித்தார். ஆரம்பத்தில் சுமுகமாக இருந்த இவர்களின் உறவில் லேசாக விரிசல் ஏற்பட்டுள்ளது. அதற்குக் காரணம் கணவரின் போதைப் பழக்கத்துக்கு அடிமையானதுதான். மேலும் மனைவிக்கும் கஞ்சாவை கொடுத்து உட்கொள்ள வற்புறுத்தி உள்ளார் கணவர்.

இதுமட்டுமின்றி மருமகள் சோனம் மோட்டீசை மாமியாரும், மாமனாரும் கொடுமைப் படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த வீட்டை விட்டு வெளியேறிய சோனம் தந்தை வீட்டில் தஞ்சம் அடைந்துள்ளார். பின்னர் அவரை சமாதானம் செய்து வைத்து மீண்டும் கணவர் வீட்டிற்கு அனுப்ப முயன்றார் தந்தை.

ஆனால் கணவர் வீட்டில் சோனமை சேர்க்கவில்லை. இதனால் தந்தை வீட்டிற்கும் செல்லாமல் தனியாக வீடு எடுத்து வசித்து வந்துள்ளார் பெண் மருத்துவர் சோனம் மோட்டீஸ். இந்நிலையில் தனிமையில் சில மாதங்களாக வாழ்ந்து வந்த சோனம் கணவர் இன்றி, குடும்பம் இன்றி மன அழுத்தத்தில் இருந்துள்ளார்.

திருமணம் செய்து கொள்வதற்கு முன் இருந்த சுதந்திரம், தற்போது இல்லையே என கருதி மருத்துவத்திற்காக பயன்படுத்தப்படும் ஊசியை எடுத்து தனக்குத் தானே போட்டுக்கொண்டுள்ளார். குறிப்பிட்ட அளவுக்கு மேல் ஊசிமருந்தை செலுத்தியதால் வீரியம் காரணமாக உயிரிழந்தார் சோனம் மோட்டீஸ்.

தகவல் அறிந்து வந்த சோனமின் தந்தை கணவர், மாமனார், மாமியார் கொடுமை காரணமாகவே மகள் உயிரிழந்துவிட்டதாக போலீசில் புகார் அளித்தார். இதை அடுத்து 3 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து போலீஸ் விசாரித்து வருகிறது.-Source: times

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!