அவரை நேரில பார்த்தது கூட இல்ல.. ஸ்ரீரெட்டி அடித்த திடீர் பலடி..!


நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது பாலியல் புகார் சொல்லி பரபரப்பு ஏற்படுத்திய ஸ்ரீரெட்டி, தற்போது எனக்கும் அவருக்கும் தொடர்பு இல்லை என்று கூறியிருக்கிறர்.

நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது பாலியல் புகார் சொல்லி பரபரப்பு ஏற்படுத்தியவர் ஸ்ரீரெட்டி. ஆந்திராவில் அரை நிர்வாண போராட்டமும் நடத்தினார். தமிழ் நடிகர்கள், இயக்குனர்களும் ஸ்ரீரெட்டி பாலியல் புகார் பட்டியலில் சிக்கினர். தற்போது ஸ்ரீரெட்டியின் வாழ்க்கை ரெட்டி டைரி என்ற பெயரில் படமாகி வருகிறது.

சமூக வலைத்தளத்தில் அடிக்கடி சர்ச்சை கருத்துகளையும், கவர்ச்சி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார் ஸ்ரீரெட்டி. இந்நிலையில், உதயநிதியை பற்றி ட்விட்டர் கணக்கில் பதிவு ஒன்றை செய்திருக்கிறார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுகுறித்து ஸ்ரீரெட்டி கூறும்போது, ‘உதயநிதியை நான் நேரில் கூட பார்த்தது கிடையாது. உதயநிதியை பற்றி தவறுதலாக போடப்பட்ட பதிவு எனது ட்விட்டர் கணக்கு இல்லை. போலியான கணக்கு, உதயநிதி பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி. வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்னையும் வாழ வைக்கும் என நம்புகிறேன். மிக விரைவில் அரசியலுக்கு வருகிறேன். தமிழகத்திற்கு சேவை செய்ய காத்திருக்கிறேன்’ என்றார்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!