மனைவி தலையை வெட்டி ஊர்வலமாக எடுத்து சென்ற கணவர்…. நெஞ்சை பதற வைத்த காரணம்..!


“ஏங்க இப்படி குடிக்கறீங்க”ன்னு கேள்வி கேட்ட.. சாந்தியின் தலையை வெட்டி மெக்கானிக் கணவர் ஊர்வலமாக எடுத்து போயுள்ளார்!

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா அருகே உள்ள பகுதி கச்புரா. இங்கு வசித்து வருபவர் நரேஷ்பாகெல். 33 வயதாகிறது. இவர் ஒரு டிவி மெக்கானிக். மனைவி பெயர் சாந்தி தேவி. இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர்.

ஆனால் நரேஷூக்கு குடிப்பழக்கம் உள்ளது.. சூதாட்டமும் உள்ளது.. எந்நேரமும் போதையுடன் திரியும் கணவரை கண்டு மனம் நொந்து மனைவி கண்டித்தார். ஆனால் சாந்தியின் பேச்சை நரேஷ் கேட்கவே இல்லை. இதனால் தகராறும் வந்து கொண்டே இருந்தது.

நேற்று காலையிலேயே நரேஷ் வேலையை காட்ட ஆரம்பித்துவிட்டார். இதனால் வழக்கம்போல சாந்தி இதை தட்டி கேட்டார். கண்ணை மறைத்த போதை, உடனே அரிவாளை எடுத்து சாந்தியை வெட்ட செய்தது.. சாந்தியின் தலை தனியாக கீழே போய் விழுந்தது. முண்டத்தை எடுத்து வீட்டுக்குள் ஒரு ரூமில் போட்டு பூட்டினார். தலையை எடுத்து ஒரு டப்பாவுக்குள் போட்டு, ரோட்டில் அதை எடுத்து சென்றார்.. கிட்டத்தட்ட 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஊர்வலமாக இந்த தலையை கொண்டு சென்றார்.

எதற்காக என்றால், சாந்தி தலையை ஒரு கம்பத்தில் தொங்க விட வேண்டுமாம்.. அதற்காகத்தான் ஊரே பார்க்க வேண்டும் என்று 5 கிலோ மீட்டர் தூரம் நடந்து கொண்டிருந்தார். இதை பார்த்த மக்கள் தலைதெறிக்க ஓடினர். உடனடியாக போலீசில் புகார் செய்தனர். விரைந்து வந்த போலீஸ் நரேஷை கைது செய்து விசாரித்தனர். “என்னை நிம்மதியா குடிக்க விடறது இல்லை, சீட்டு விளையாட விடறது இல்லை, எப்ப பார்த்தாலும் அட்வைஸ், அதனாலதான் கொன்னுட்டேன்” என்றார்.

இதனிடையே அம்மாவை காணோம் என்று 4 குழந்தைகளும் வீட்டில் தேடி உள்ளனர், அப்போதுதான் ரூமின் கதவு வெளிப்பக்கமாக பூட்டப்பட்டுள்ளதை கண்டு, ஜன்னல் வழியாக எட்டி பார்த்தனர். அங்கே தலை இல்லாமல் தாயின் உடல் மட்டும் கிடப்பதை கண்டு அலறி கத்தினர்.

அதற்குள் விரைந்து வந்த போலீஸ், உடலை மீட்டனர். நரேஷிடம் விசாரணை நடக்கிறது. தாயை பறிகொடுத்து, தந்தையையும் பிரிந்து 4 குழந்தைகளும் அழுது கொண்டுள்ளனர்.-source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!