நாமக்கல் அருகே டிரான்ஸ்பார்மரில் மோட்டார் சைக்கிள் மோதி புதுமாப்பிள்ளை பலியான சம்பவம் குறித்து எலச்சிபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் மாவட்டம், சங்ககிரி ஈ.பி. ஆயில் ரோடு பகுதியை சேர்ந்தவர் தினேஷ்குமார் (28). இவர் திருச்செங்கோடு அருகே உள்ள தனியார் சத்து மாவு தயாரிக்கும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவரும், இவரது மனைவி கலைசெல்வியும் (27) ராசிபுரத்தில் உள்ள உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்றனர். திருமணத்தை முடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார்கள். அப்போது கொன்னையார் பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது, சாலை ஓரத்தில் இருந்த டிரான்ஸ்பார்மரில் மோட்டார் சைக்கிள் வேகமாக மோதியது.
இதில் தினேஷ்குமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவரை மீட்டு 108 ஆம்புலன்சில் திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார். அவரது மனைவி கலைசெல்விக்கு காலில் அடிபட்டதில் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தினேஷ்குமாருக்கு திருமணமாகி 10 நாட்கள் தான் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து எலச்சிபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.-Source: maalaimalar
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!