பெண்ணை பலாத்காரம் செய்த காதலன்..! உதவிக்கு வந்த 3 பேரும் சேர்ந்து கற்பழித்த கொடூரம்…!!


சத்தீஷ்கர் மாநிலம் ராய்பூரை அடுத்த காபாவை சேர்ந்தவர் ரேகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது).

விதவையான இவர் இங்குள்ள ஓட்டல் ஒன்றில் வேலை செய்து வருகிறார். அப்போது அங்கு வேலை செய்யும் சுரேஷ் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் ரேகாவை சுரேஷ் ஓட்டலில் வேலையை முடித்து பின்னர் காபாவில் இருந்து ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்து சென்றார்.

அங்கு ரேகாவை பலவந்தமாக பலாத்காரம் செய்தான்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ரேகா உதவி கேட்டு கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அங்கு 3 பேர் வந்தனர். அவர்கள் 3 பேரும் சுரேசை அங்கிருந்து மிரட்டி துரத்தி விட்டனர்.

பின்னர் அவர்கள் 3 பேரும் சேர்ந்து ரேகாவை மாறி மாறி கற்பழித்தனர்.

அதன்பிறகு இந்த விஷயத்தை வெளியில் சொன்னால் விளைவு விபரீதமாக மாறி விடும் என்று எச்சரித்து விட்டு தப்பி சென்றனர்.

இது குறித்து பாதிக்கப்பட்ட ரேகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த போலீசார் காதலன் சுரேஷ் மற்றும் ஹரீஷ், திரிஷ், வினய் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.-Source: liveday.in

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!