![](http://www.tamilvoicenews.com/wp-content/uploads/2021/11/Capturing-famous-actor-in-hotel.jpg)
தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடித்துள்ள நடிகர் ஒருவரை சொகுசு விடுதி ஊழியர்கள் சிறை பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மலையாளம் மற்றும் ஏராளமான தமிழ் படங்களில் நடித்தவர் பிரபல நடிகர் ஜெயராம். இவரது மகன் காளிதாஸ் ஜெயராம். இவரும் மலையாள படங்களில் நடித்துள்ளார். தமிழில் மீன்குழம்பும், மண்பானையும், ஒருபக்க கதை ஆகிய படங்கில் நடித்துள்ளார். தற்போது வெப் தொடர்களில் நடித்து வருகிறார்.
ஒரு வெப் தொடரில் நடிப்பதற்காக கேரள மாநிலம் மூணாறு பகுதிக்கு சென்றார் காளிதாஸ். அங்கு படக்குழுவினருடன் ஒரு சொகுசு விடுதியில் தங்கியிருந்தார். இதற்கான அறை வாடகை, ஓட்டல் கட்டணம் ஆகியவற்றை கட்ட ஊழியர் வலியுறுத்தினர்.
![](http://www.tamilvoicenews.com/wp-content/uploads/2021/11/kalidas-2.jpg)
இதையடுத்து படக்குழுவினர் ஆன்லைன் மூலம் பணத்தை செலுத்தினர். ஆனால் ஓட்டல் வங்கி கணக்கிற்கு பணம் வரவில்லை. இதையடுத்து ஓட்டல் ஊழியர்கள் நடிகர் காளிதாஸ் ஜெயராம் மற்றும் படக்குழுவினரை உடனே ஓட்டல் கட்டணத்தை கட்டுமாறு கூறினர்.
இதில் அவர்களுக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஓட்டல் ஊழியர்கள் நடிகர் காளிதாஸ் ஜெயராம் உள்பட படக்குழுவினரை சிறைபிடித்தனர். இதையடுத்து மூணாறு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் விரைந்து வந்து பேச்சு வார்த்தை நடித்தினர்.
அதன் பின்னர் படக்குழுவினர் ஓட்டல் கட்டணத்தை செலுத்தினர். இதையடுத்து ஓட்டல் ஊழியர்கள் நடிகர் காளிதாஸ் ஜெயராம் மற்றும் படக்குழுவினரை விடுவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!