![](http://www.tamilvoicenews.com/wp-content/uploads/2021/09/Sasikala-tribute-ops-wife.jpg)
மாரடைப்பால் உயிரிழந்த ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க.வினர் மற்றும் அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார்.
சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக கடந்த 22-ந்தேதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
![](http://www.tamilvoicenews.com/wp-content/uploads/2021/09/sasika3.jpg)
இன்று காலை விஜயலட்சுமிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அவரை காப்பாற்ற டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். என்றாலும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க.வினர் மற்றும் அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில் மருத்துவமனையில் உள்ள விஜயலட்சுமி உடலுக்கு சசிகலா நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
பின்னர், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் குடும்பத்தினரை சந்தித்து சசிகலா ஆறுதல் கூறினார். அப்போது, ஓ.பன்னீர்செல்வம் கண்கலங்கிய நிலையில் காணப்பட்டார்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!