உயிரோடு கள்ளக்காதலியை எரித்துக்கொன்ற தொழிலாளிக்கு அதிரடி தீர்ப்பு..!

ஊட்டி அருகே கள்ளக்காதலியை எரித்துக்கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து, ஊட்டி மகளிர் கோர்ட்டு தீர்ப்புக்கூறியது.

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள பைக்காரா பகுதியை சேர்ந்தவர் ஆனந்த் என்ற ஆனந்தகுமார்(வயது 48). கூலி தொழிலாளி. திருமணமான இவர், தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார். அப்போது ஆனந்தகுமாருக்கும், அதே பகுதியில் கணவரை இழந்து வாழ்ந்து வந்த ஆயிஷா என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் நெருக்கமாக பழகி வந்தனர்.

இதற்கிடையில் மற்றொரு நபருடன் ஆயிஷா பழகியதாக கூறப்படுகிறது. இதை அறிந்த ஆனந்தகுமார் சம்பவத்தன்று ஆயிஷாவிடம் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

மேலும் ஆத்திரம் அடைந்த ஆனந்தகுமார் திடீரென ஆயிஷா மீது மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்தார். இதில் மளமளவென உடல் முழுவதும் தீ பரவியதால், அவர் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஊட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ஆயிஷா இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் பைக்காரா போலீசார் கொலை வழக்குப்பதிந்து, ஆனந்தகுமாரை கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை ஊட்டி மகளிர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. கோவையில் சிகிச்சை பெற்றபோது நீதிபதியிடம் ஆயிஷா மரண வாக்குமூலம் அளித்தார். அவரது முதல் கணவருக்கு 2 குழந்தைகள் இருப்பது விசாரணையில் தெரியவந்தது.

இந்த நிலையில் நேற்று வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. கள்ளக்காதலியை தீ வைத்து எரித்து கொலை செய்த ஆனந்தகுமாருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.1000 அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வக்கீல் மாலினி ஆஜராகி வாதாடினார்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!