குல்பூ‌ஷண் ஜாதவுக்கு நடந்த கொடுமை பற்றி உளவு துறை அதிகாரி பகீர் தகவல்..!


குல்பூ‌ஷண் ஜாதவ் மரண தண்டனையை எதிர்த்து சர்வதேச கோர்ட்டில் இந்தியா முறையிட்டது. அதைத் தொடர்ந்து, அவருடைய மரண தண்டனையை நிறைவேற்ற சர்வதேச கோர்ட்டு தடை விதித்துள்ளது. இந்த நிலையில் பாகிஸ்தானில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள குல்பூ‌ஷண் ஜாதவை இந்தியாவில் உள்ள அவரது தாயாரும், மனைவியும் சந்திக்க விரும்பினர். இவ்விவகாரம் தொடர்பாக இந்தியாவின் கோரிக்கையை ஏற்று, குல்பூஷண் ஜாதவை அவரது தாயார் அவந்தி மற்றும் மனைவி சேத்தன்குல் சந்தித்துப் பேசுவதற்கு பாகிஸ்தான் விசா வழங்கியது.

இதனையடுத்து நேற்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் பாதுகாப்புக்கு இடையே குல்பூஷண் ஜாதவை அவர்கள் சந்தித்தனர். இதுதொடர்பான புகைப்படங்களையும் பாகிஸ்தான் வெளியிட்டது.

பாகிஸ்தான் வெளியிட்ட புகைப்படங்கள் குல்பூஷண் ஜாதவ் சிறையில் கொடூரமாக சித்தரவதை செய்யப்பட்டார் என்பதை உறுதி செய்யும் வகையில் உள்ளது.


குல்பூஷண் ஜாதவின் வாக்குமூலம் என ஏற்கனவே பாகிஸ்தான் வெளியிட்ட வீடியோவையும், இப்போது வெளியிட்ட புகைப்படத்தையும் ஒப்பிட்டு பார்க்கையில் அவருடைய காது மடல் மாயமாகி உள்ளது தெரியவந்து உள்ளது. அவருடைய தலை மற்றும் கழுத்து பகுதியில் காயம் இருந்து உள்ளது. இது அவர் சிறையில் சித்தரவதை செய்யப்படுகிறார் என்பதை உறுதி செய்யும் வகையில் உள்ளது. இதற்கிடையே குல்பூஷண் ஜாதவை அவருடைய தாய் மற்றும் மனைவி சந்திப்பதற்கு முன்னதாக ஜெர்மனி நாட்டை சேர்ந்த மருத்துவர் பரிசோதனை செய்து உள்ளார். துபாய் மருத்துவமனையில் பணிபுரிந்த மருத்துவருக்கு அழைப்பு விடுத்து உள்ள பாகிஸ்தான், அவரை அழைத்து வந்து பரிசோதனையை மேற்கொண்டு உள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் புலனாய்வு அறிக்கையின்படி, குல்பூஷன் ஜாதவ் பாகிஸ்தானால் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து ஆங்கில தகவல் வெளியிட்டு உள்ள உளவு அதிகாரி ஒருவர் ஜாதவுக்கு மின்சார ஷாக் கொடுக்கபட்டு உள்ளது மேலும் குல்பூஷன் ஜாதவ் கேமராவின் முன் வாசிப்பதற்கு ஸ்கிரிப்டை வழங்கியதாக கூறப்பட்டு உள்ளது. பாகிஸ்தானின் பொய்களுக்கு பின்னால் மறைந்து உள்ள உண்மையை கண்டுபிடிக்க உளவாளிகளுக்கு மிகவும் எளிதானது என்று கூறினார்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!