கூல்ட்ரிங்ஸ் பாட்டிலுக்குள் நாக்கை விட்ட சிறுவன்..! பிறகு அரங்கேறிய விபரீதம்!


பாட்டிலில் எஞ்சிய ஜூஸை குடிக்க ஆசைப்பட்டு அதன் உள்ளே நாக்கை விட்ட நபருக்கு பரிதாப சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஜெர்மனியில் உள்ள ஹானோவர் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுவன், சில நாள் முன்பாக, பாட்டிலில் அடைத்து விற்கப்படும் ஜூஸ் ஒன்றை வாங்கி, ஆசையாகக் குடித்துள்ளான். இதில், சில துளிகள் கடைசியாக பாட்டிலின் அடியில் தங்கியதாகக் கூறப்படுகிறது. அதனையும் நாவால் நக்கி குடிக்க தீர்மானித்த சிறுவன் பாட்டிலை கவிழ்த்து பிடித்தபடி, பாட்டிலின் உள்ளே தனது நாக்கை செலுத்தி சுழற்றி குடித்துள்ளான்.

நாக்கை ஓவராகச் சுற்றியதில் அது பாட்டிலின் உள்ளேயே திருகிய நிலையில் சிக்கிக் கொண்டுவிட்டது. ஜூஸையும் விழுங்க முடியாமல் நாக்கையும் வெளியே எடுக்க முடியாமல் சிறுவன் அலறவே, உடனடியாக அவனது பெற்றோர் ஆஃப் டெர் பல்ட் குழந்தைகள் மருத்துவமனையில் அவனை சேர்த்தனர்.

அங்கு சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள், பாட்டிலின் அடிமுனை வழியே அதிக அழுத்தம் கொண்ட காற்றை செலுத்தியுள்ளனர். இதில், சிறுவனின் நாக்கு விடுபட்டுள்ளது. பிறகு, அவனுக்கு புத்திமதி சொல்லி டாக்டர்கள் அனுப்பி வைத்தனர்.-Source: times.tamil

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!