ஓபிஎஸ் – ஈபிஎஸ் ஜெ.வுக்கு செய்த துரோகத்தால் தான் தினகரன் வெற்றி பெற்றார் – குஷ்பு..!


காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஓபிஎஸ், ஈபிஎஸ் ஜெயலலிதாவுக்கு செய்த துரோகத்தால் ஆர்.கே.நகரில் டிடிவி தினகரன் வெற்றி பெற்று உள்ளார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவுக்கு, ஆட்சியின் மீதான அதிருப்தியே காரணம். ஜெயலலிதாவை விட டிடிவி தினகரன் சிறந்த அரசியல்வாதி கிடையாது. டிடிவி தினகரனின் குறிக்கோள் தமிழகத்தில் ஆட்சியை கலைப்பது தான்.

ஆர்.கே.நகர் தொகுதியில் டிடிவி தினகரனுக்கு இவ்வளவு வாக்குகள் எப்படி கிடைத்தன. பணப்பட்டுவாடா தொடர்பான புகார்கள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழக மக்கள் தினகரன் முதலமைச்சராக வேண்டும் என நினைக்கவில்லை. தினகரன் சிறந்த அரசியல்வாதி இல்லை. ஆர்.கே.நகர் வெற்றிக்கு பணமே காரணம் என கூறினார்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!