மனைவி உல்லாசத்துக்கு மறுப்பு… பிஞ்சுக் குழந்தைக்கு பெற்ற தந்தை செய்த கொடூரம்..!


உல்லாசத்துக்கு தடையாக அழுது கொண்டிருந்த பச்சிளம் குழந்தையை அடித்துக்கொலை செய்த தந்தை கைது செய்யப்பட்டார்.

சென்னை கே.கே.நகர் டாக்டர் அம்பேத்கர் காலனியை சேர்ந்தவர் துர்கா(வயது 25). இவர், ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவருடைய முதல் கணவர், பிரிந்து சென்றுவிட்டார். முதல் கணவர் மூலம் ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு எல்லப்பன்(27) என்பவரை துர்கா 2-வது திருமணம் செய்து கொண்டார். எல்லப்பன் மூலம் துர்காவுக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை ஒன்று பிறந்தது. அந்த குழந்தைக்கு ராஜமாதா என்று பெயரிட்டிருந்தனர். எல்லப்பனும் ஒப்பந்த துப்புரவு தொழிலாளி ஆவார்.

நேற்று காலையில் குழந்தை ராஜமாதா, வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தது. குழந்தையின் மூக்கில் இருந்து ரத்தம் வடிந்தது. குழந்தை கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

இது தொடர்பாக எம்.ஜி.ஆர். நகர் போலீஸ் நிலையத்தில் துர்கா பரபரப்பு புகார் கொடுத்தார். அந்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-

எனது கணவர் எல்லப்பன், குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர். தினமும் போதையில் வந்து என்னிடம் உல்லாசமாக இருப்பார். உல்லாசத்துக்கு தடையாக குழந்தை ராஜமாதா இரவு நேரத்தில் அழுதுகொண்டே இருப்பாள். இது எனது கணவருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

சம்பவத்தன்று இரவு 2 முறை எனது கணவர் உல்லாசத்துக்கு அழைத்தார். குழந்தை ராஜமாதா அழுதுகொண்டே இருந்ததால் என்னால் எனது கணவரோடு உல்லாசத்தை பகிர்ந்து கொள்ள முடியவில்லை. உல்லாசத்தை நான் மறுத்துவிட்டேன். இதனால் குழந்தையை எனது கணவர் பலமாக அடித்துவிட்டார். என்னையும் அடித்து உதைத்தார். காலையில் பார்த்தபோது குழந்தை இறந்து கிடந்தது.

இவ்வாறு புகார் மனுவில் துர்கா கூறி இருந்தார்.

இந்த புகார் மனு தொடர்பாக தியாகராயநகர் துணை கமிஷனர் அசோக்குமார் உத்தரவின்பேரில் எம்.ஜி.ஆர். நகர் போலீசார் விசாரணை நடத்தினார்கள். எல்லப்பன் அடித்ததின் பேரிலேயே அவரது குழந்தை ராஜமாதா இறந்தது தெரியவந்தது. இதனால் கொலை குற்றம் சுமத்தப்பட்டு எல்லப்பன் கைது செய்யப்பட்டார்.

குழந்தை ராஜமாதாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!