முகத்தில் மட்டுமல்ல இந்த இடத்தில் வரும் பருக்களாலும் பிரச்னை என தெரியுமா..?


பலருக்கு முகத்தில் வருவது போன்றே பிட்டப் பகுதியிலும் பருக்கள் வரும். ஆனால் பிட்டத்தில் வரும் பருக்கள் வலியுடனும், எரிச்சலுடனும் இருப்பதோடு, உட்காரும் போது அசௌகரியத்தையும் ஏற்படுத்தும். இப்பிரச்னை ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் இருக்கும்.

பொதுவாக பருக்களானது, அதிக வியர்வையால் சருமத்துளைகளினுள் எண்ணெய், அழுக்குகள் மற்றும் இறந்த செல்கள் தேங்கினால் வரும். பிட்டத்தில் பருக்கள் வருவதற்கு வேறுசில காரணங்களும் உள்ளன. அங்கு சில க்ரீம்களால் ஏற்படும் அலர்ஜி, பாக்டீரியல் தொற்றுகள் போன்றவற்றாலும் வரும். மேலும் இறுக்கமான உடையை அணிவதால், பிட்டப்பகுதியில் காற்றோட்டம் குறைவாக இருந்து, சருமத்தால் சுவாசிக்க முடியாமல் போய், அதன் விளைவாக வலிமிக்க பருக்களை உண்டாக்கும்.


சில பெண்களுக்கு கர்ப்ப காலம் மற்றும் மாதவிலக்கு காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களாலும் பிட்டத்தில் பருக்கள் வரும்.
முக்கியமாக நீண்ட நேரம் உட்கார்ந்தே வேலை செய்வதாலும், பிட்டத்தில் அசிங்கமான மற்றும் வலிமிக்க பருக்கள் வரும். அதோடு ஷேவிங் மற்றும் வேக்ஸிங்க் செய்வதாலும் பருக்கள் எழக்கூடும்.

இப்படி பிட்டத்தில் வரும் பருக்களைப் போக்க ஏராளமான இயற்கை வழிகள் உள்ளன. இங்கு அதில் மிகவும் சிறப்பான மற்றும் அனைவரும் எளிதில் மேற்கொள்ளக் கூடியவாறான சில இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.


தயிர் மற்றும் மஞ்சள்

டேபிள் ஸ்பூன் தயிருடன், 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து ஒன்றாக கலந்து, பருக்கள் உள்ள பிட்டப் பகுதியில் தடவி நன்கு காய்ந்த பின், வெதுவெதுப்பான நீரால் அப்பகுதியைக் கழுவ வேண்டும். இந்த செயல் முறையை வாரத்துக்கு 3 முறை மேற்கொண்டால், பிட்டத்தில் இருக்கும் பருக்கள் வேகமாக போய்விடும்.


தயிர் மற்றும் எலுமிச்சை சாறு

டேபிள் ஸ்பூன் தயிரில், 1/2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் பிட்டப் பகுதியை வெதுவெதுப்பான நீரால் கழுவிக் கொள்ள வேண்டும். பின்பு தயாரித்து வைத்துள்ள கலவையை பஞ்சில் தோய்த்து பிட்டப்பகுதியில் தடவி நன்கு காய வைக்க வேண்டும். பின் குளிர்ந்த நீரால் பிட்டப்பகுதியைக் கழுவ வேண்டும். இந்த முறையை தினமும் ஒருமுறை செய்து வந்தால், பிட்டத்தில் உள்ள பருக்கள் மறைந்துவிடும்.


தயிர் மற்றும் தேன்

டேபிள் ஸ்பூன் தயிருடன் 1 டீஸ்பூன் தேன் கலந்து பருக்கள் உள்ள பிட்டப் பகுதியில் தடவி, சில நிமிடங்கள் காய வைக்க வேண்டும். பின் அப்பகுதியை வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். இந்த முறையை அடிக்கடி செய்து வர, பிட்டத்தில் இருக்கும் பருக்களை சீக்கிரம் போக்கலாம்.

தயிர் மற்றும் ஓட்ஸ்

டேபிள் ஸ்பூன் தயிருடன் 1 டீஸ்பூன் ஓட்ஸ் பொடியை சேர்த்து கலந்து, பிட்டத்தில் தடவி நன்கு காய வைக்க வேண்டும். பின்பு வெதுவெதுப்பான நீர் பயன்படுத்தி கழுவ வேண்டும். இப்படி அடிக்கடி செய்ய பிட்டத்தில் உள்ள பருக்கள் போய்விடும்.-Source:

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!