தமிழன் என்று சொல்லடா, தள்ளாடி நில்லடா… கஸ்துாரி கிண்டல்


தீபாவளியை முன்னிட்டு மது விற்பனையில், அரசு சாதனை செய்திருப்பதை, நடிகை கஸ்துாரி கிண்டல் அடித்துள்ளார். இது குறித்து, டுவிட்டர் பதிவில், அவர் கூறியிருப்பதாவது: தமிழகம் – அசுர சாதனை. டாஸ்மாக் மது விற்பனையில், தமிழக அரசு சரித்திர சாதனையை நிகழ்த்தியுள்ளது.

இம்மாதம், 25ம் தேதி 100 கோடி ரூபாய்; 26ம் தேதி, 183 கோடி ரூபாய்; 27ம் தேதி, 172 கோடி ரூபாய் என, மொத்தம், 455 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்கப்பட்டுள்ளன. தமிழன் என்று சொல்லடா, தள்ளாடி நில்லடா!இவ்வாறு, கஸ்துாரி கூறியுள்ளார்.கஸ்துாரியின் கருத்தை பார்த்த சிலர், மனதில் கை வைத்து சொல்; நீ குடிக்க மாட்டாயா? என, கேள்வி எழுப்பினர்.

அதற்கு கஸ்துாரி, நான் குடிக்க மாட்டேன். மது மட்டுமல்ல; டீ, காபி, குளிர்பானம் என, எதையும் குடிக்க மாட்டேன். அசைவம் உண்பதில்லை. எனக்கு எல்லா நாளும் விரதம் தான் என, பதில் அளித்துள்ளார்.-Source: dinamalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!