டைரக்டர் அட்லிக்கு இப்படி ஒரு நிலமையா..? தொடரும் சர்ச்சைகள்..!


அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பிகில் படம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கிறது. படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. பிகில் கதை தன்னுடையது என்றும், அதை திருடி விட்டனர் என்றும் உதவி இயக்குனர் செல்வா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

காப்புரிமை வழக்கு தொடர கோர்ட்டு அவருக்கு அனுமதி வழங்கியது. ஏற்கனவே அட்லி இயக்கத்தில் ஆர்யா, நயன்தாரா நடிப்பில் வெளியான ராஜா ராணி படம் மணிரத்னத்தின் மவுன ராகம் தழுவல் என்றும், தெறி படம் சத்ரியன் தழுவல் என்றும், மெர்சல் படம் அபூர்வசகோதரர்கள் சாயலில் உள்ளது என்றும் விமர்சனங்கள் எழுந்தன. பிகில் படத்தை ஷாருக்கான் நடிப்பில் வெளியான சக் தே இந்தியா இந்தி படத்தோடு ஒப்பிட்டு கருத்து பதிவிட்டு வருகிறார்கள்.

இந்த குற்றச்சாட்டுகளுக்கு அட்லி விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-

“நான் நம்பிக்கையோடு இருக்கிறேன். பிகில் படத்தின் கதை என்னுடையது. இவர்கள் சொல்லும் படங்களை நானும் பார்த்து இருக்கிறேன். ஆனால் அந்த படங்களின் பாதிப்பால் எனது கதையை நான் எழுதவில்லை. ”இவ்வாறு அட்லி கூறியுள்ளார்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!