தோழியுடன் தகாத உறவு.. குழந்தைகளை தவிக்கவிட்டு மனைவி எடுத்த விபரீத முடிவு!


2 குழந்தைகளுக்கு தாயான பெண்ணொருவர் இன்னொரு பெண்ணுடன் வீட்டைவிட்டு வெளியேறிய சம்பவமானது இராமநாதபுரத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் திருவாடானை என்ற இடம் அமைந்துள்ளது. இதற்கு உட்பட்ட கிழக்கு கடற்கரை சாலை அமைந்துள்ள தொண்டிகாந்தியார் வீதியில் மணிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 6 வருடங்களுக்கு முன்னர் அதே பகுதியை சேர்ந்த சுகன்யா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. சுகன்யாவின் வயது 27. மணிவேல் கோவை மாவட்டத்தில் எலக்ட்ரீசியனாக பணியாற்றி வருகிறார். இத்தம்பதியினருக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் சுகன்யாவும், 2 குழந்தைகளும் சொந்த வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளனர். வீட்டின் ஒரு பகுதிக்கு சினேகா என்ற இளம்பெண் வாடகைக்கு குடி வந்துள்ளார். கணவர் இல்லாத காரணத்தினால் சுகன்யாவுக்கும், சினேகாவுக்கும் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை வீட்டிற்கு வந்திருந்த போது உணர்ந்த மணிவேல், தன் மனைவியை கடுமையாக கண்டித்துள்ளார்.

இந்நிலையில் 15-ஆம் தேதியன்று சுகன்யா தன்னுடைய குழந்தைகளை தனியாக விட்டுவிட்டு சினேகாவுடன் வீட்டைவிட்டு ஓடியுள்ளார். வீட்டில் மனைவி இல்லாததை பார்த்து அதிர்ச்சி அடைந்த மணிவேல் தொண்டிகாந்தியார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பதிவு செய்துள்ள காவல்துறையினர் தீவிரமாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சம்பவமானது ராமநாதபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.-Source: times.tamil-

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!