நானும் பெண்தான்.. எனக்கு அது இருக்கு.. மீரா மிதுன் வெளியிட்ட அதிர்ச்சி புகைப்படம்..!


மாடலும் நடிகையுமான மீரா மிதுன் பிக்பாஸ் நிகழ்ச்சியிலேயே பல சர்ச்சைகளை உருவாக்கினார். பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தப்பிறகும் மீரா மிதுனின் பிரச்சனை ஓய்ந்தப்பாடில்லை.

பிக்பாஸ் வீட்டில் இருந்த போது சேரன் மீது பழி சுமத்திய அவர், வெளியே வந்த பிறகும் அதனை தொடர்ந்து வருகிறார். மேலும் சாக்ஷி, அபிராமி ஆகியோர் ஜோ மைக்கேலுடன் சேர்ந்து கொண்டு தனது பெயரை டேமெஜ் செய்து வருவதாக கூறினார்.

மேலும் அவர்களின் பர்சனல் குரூப்களில் தனது மொபைல் நம்பரை பதிவிட்டு மன ரீதியாக துன்புறுத்துவதாகவும் குற்றம்சாட்டினார். தன்னை தொல்லை செய்யவும் போன் மூலம் மன ரீதியான அழுத்தத்தை கொடுக்கவும் அவர்கள் பணம் செலவு செய்திருப்பதாகவும் கூறினார்.

மேலும் இதோடு நிறுத்திக்கொள்ளுங்கள் என்றும் எச்சரித்தார் மீரா மிதுன். அபிராமி வாழும் வாழ்க்கை என் தயவில் கிடைத்தது என்று கூறிய மீரா, தொடர்ந்து தொல்லை செய்தால் அதற்கான பலனை அனுப்பவிப்பீர்கள் என்றும் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து பாலிவுட்டில் நடிப்பதாக கூறி மும்பை சென்றுள்ள மீரா, தன்னை ஒரு பெண்ணே இல்லை என அபிராமி, சாக்ஷி உள்ளிட்டோர் பொய் பிரச்சாரம் செய்வதாக கூறினார்.


இந்நிலையில் இன்று பதிவிட்ட டிவிட்டில் என்னை ஒரு திருநங்கை என்று அழைக்கும் அனைவரும் என்னை மட்டுமல்ல, திருநங்கைகளைகள் சமூகத்தையே இழிவுபடுத்துகிறார்கள், என்னைப் பற்றி சந்தேகம் உள்ள அனைவரும் டேக் செய்யப்பட்ட இயக்குநர்கள், நடிகர்கள் மற்றும் சேனலுடன் செக் செய்துகொள்ளலாம் என தெரிவித்தார்.

இந்நிலையில் தான் ஒரு பெண்தான் என்பதை நிரூபிக்கும் வகையில் முழு மார்பகமும் தெரியும் வகையில் ஒரு போட்டோவை பதிவிட்டுள்ள அவர், தீபிகா படுகோன் சொன்ன வார்த்தைகளைதான் சொல்கிறேன், நான் ஒரு பெண், எனக்கு மார்பகங்கள் உள்ளன. எனக்கு கிளீவேஜும் உள்ளது. உங்களுக்கு ஏதாவது பிரச்சனையா? ஹேட்டர்ஸ் மற்றும் ட்ரோலர்ஸ் உங்க வேலையை பாருங்க.. என பதிவிட்டிருக்கிறார் மீரா மிதுன்.

மீராவின் இந்த போட்டோவையும் டிவிட்டையும் பார்த்த நெட்டிசன்ஸ், நான் தமிழ் பொண்ணுனு சொல்லுற.. தமிழ் பொண்ணு இப்படி தான் திறந்து காட்டணுமா.. என்று கேட்கிறார் இந்த நெட்டிசன்.-Source: filmibeat

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!