பிரியாணியில் விஷம் கலந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் செய்த அதிர்ச்சி செயல்..!


தெலுங்கானா மாநிலம் யாதத்ரி-புவனகிரி மாவட்டம் ராஜாபேட்டை சேர்ந்தவர் பால ராஜ் ( வயது 44) இவரது மனைவி திருமலா( வயது 39) இவரகளுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். பால ராஜ் அங்குள்ள கோழிப்பண்னையில் வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் இன்று காலை பாலராஜ் மற்றும் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் 7 பேர் ஒரே வீட்டில் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்து உள்ளது.

தற்கொலைக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. பிரியானில் விஷம் கலந்து வீட்டில் உள்ள 7 பேரும் சப்பிட்டு தற்கொலை செய்து உள்ளனர். கோழிப்பண்னையில் பயன்படுத்து பூச்சி கொல்லி மருந்தை பயன்படுத்தி தற்கொலை செய்து உள்ளனர்.

பாலராஜ் அவரது மனைவி திருமலா குழந்தைகள் சிவானி (16) சிந்து (12) பன்னி(8) மற்றும் மாமனார் பாலநரசய்யா(65) பரத்தம்மா( 60)

ஆகியோர் தற்கொலை செய்து உள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!