நாம் ஒருவரை நேசிக்கும்போதோ நம்மை நேசித்த ஒருவரோ நம்மை விட்டுச் சென்றுவிட்டால் அந்த தருணத்தைவிடக் கொடுமையானது உலகில் எதுவும் இல்லை. அப்படிச் சென்றவர் நம் மனைவியாகவே இருந்துவிட்டால் அதன் வேதனைகளை விளக்க வார்த்தைகளே இல்லை.
அமெரிக்காவின் தெற்கு கரோலினா பகுதியைச் சேர்ந்தவர் கெவின் ஹோவர்டு, இவருக்கு 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்நிலையில் கெவினின் மனைவி வேலை பார்க்கும் அலுவலகத்தில் அவருக்கு ஒரு நண்பர் இருந்திருக்கிறார். அவர் அடிக்கடி அவரது மனைவியுடன் வீட்டிற்கு வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார். முதலில் கெவின் அவரை தன் மனைவியின் நண்பர் என்றே நினைத்திருக்கிறார்.
இவர்களது பழக்கம் நாட்கள் செல்ல செல்ல கெவினிற்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதனால் நடக்கும் உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டும் என கெவின் ஒரு தனியார் டிடெக்டிவ்வை நியமித்து தன் மனைவியின் நடத்தைகளைக் கண்காணிக்கச் சொன்னார்.
அந்த நிறுவனம் அவரது மனைவி, தன் அலுவலகத்தில் வேலை பார்க்கும் நபருடன் கள்ள உறவு வைத்திருப்பதை அவரிடம் ஆதாரப்பூர்வமாக நிரூபித்தது. இதையடுத்து இவரும் விவாகரத்து கோரி கோட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் ஒரு அங்கமாக கெவின் அவரது மனைவியின் கள்ளக்காதலனையும் வழக்கிற்குள் இழுத்தார். தன் குடும்ப வாழ்க்கை நன்றாகப் போய்க்கொண்டிருந்த நிலையில் மனைவியின் கள்ளக்காதலன் எங்கள் அன்பைக் குழைக்கும் வகையில் உள்ளே புகுந்து என் மனைவியை என்னிடம் இருந்து பிரித்துவிட்டார் என அவர் மீது கெவின் குற்றம்சாட்டியிருந்தார்.
கெவின் குற்றச்சாட்டை விசாரித்த கோர்ட் அதை உண்மை எனக் கூறி கெவின் மனைவியின் கள்ளக்காதலனுக்கு 7.5 லட்சம் அமெரிக்க டாலர் அதாவது இந்திய மதிப்பில் ரூ5.32 கோடி தொகையை அபராதமாக விதித்து அந்த தொகையை கெவினிற்கு நஷ்டஈடாக வழங்கும்படி உத்தரவிட்டது.
அமெரிக்காவில் உள்ள சில மாகாணங்களின் குடும்ப உறவுகளைப் பிரிக்கும் நபர்களையும் குற்றவாளியாகப் பார்க்க வேண்டும் என்ற “குடும்ப சிதைப்பு” சட்டம் அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.-Source: tamil.samayam
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!