கருவளையத்தை வீட்டிலுள்ள இந்த பொருட்களை வைத்தே காணாமல் போகச் செய்யலாம்..!


ஆண்கள் பெண்கள் என அனைவருக்கும் இருக்கும் பொதுவான ஒரு விஷயம் கண்களுக்கு கீழே இருக்கும் கருவளையம். இங்கு வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே இந்த கண் கருவளையத்தை சரிசெய்யும் முறைகளை காணலாம்


தக்காளி
தக்காளி ஜூஸை ஒரு டீ ஸ்பூன் எடுத்து, கருவளையம் இருக்கும் பகுதிகளில் தடவி, 10 நிமிடத்திற்கு பின் கழுவ வேண்டும். இவ்வாறு தினமும் காலை மாலை இருவேளைகளும் செய்துவர விரைவில் கருவளையம் சரியாகும்.


துருவிய உருளைக்கிழங்கு
துருவிய உருளைக்கிழங்கிலிருந்து சாறு எடுத்து, அதில் பஞ்சை .ஊற வைத்து, அதை கருவளையம் இருக்கும் இடத்தில் வைத்து விட வேண்டும். 10 நிமிடத்திற்கு பின், குளிர்ந்த நீரினால் முகத்தை கழுவி வர கருவளையம் போய் விடும்.

டீ பேக்குகள்
டீ பேக்குகளை குளிர்ந்த நீரில் ஊற வைத்து, கருவளையம் இருக்கும் இடத்தில் வைத்தாலும் கண் கருவளையம் சரியாகும்.


பாதாம் எண்ணெய்
பாதாம் எண்ணெய்யை கொண்டு முகத்தில் மசாஜ் செய்து, இரவு முழுவதும் விட்டு விட்டு, காலையில் கழுவி வர, அதில் இருக்கும் வைட்டமின் ஈ சக்தி, கருவளையத்தை போக்குகிறது.

குளிர்ந்த பால்
தினமும் குளிர்ந்த பாலில், பஞ்சை நனைத்து, கருவளையத்தில் தேய்த்து வர, கருவளையம் நீங்கி முகப்பொழிவு கூடும்

யோகா
தினசரி யோகா தியானம் செய்வதால், பெரும் புத்துணர்ச்சி முகப்பொழிவு பெற முடியும். யோகா செய்பவர்களை பார்த்தாலே ஒரு தேஷசான முகம் இதை நிரூபிக்கும்


வெள்ளிரிக்காய்
வெள்ளிரிக்காயை ஒரு அரை மணி நேரம் பிரிட்ஜில் வைத்து, அதை 10 நிமிடம் கருவளையத்தில் வைத்து வர முகம் புத்துணர்ச்சியடையும்

புதினா இலை
புதினா இலையை நீரில் நினைத்து பசையாக்க வேண்டும். அதை ஒரு வாரம் இரவு முழுவதும் கருவளையத்தில் தடவி வர ஆச்சரியப்படத்தக்க முகப்பொழிவு கிடைக்கும்.


ரோஸ் வாட்டர்
ரோஸ் வாட்டரில் பஞ்சை நனைத்து, முகத்தில் ஒரு 15 நிமிடம் ஊற வைக்க முகப்பொழிவு கிடைக்கும். இவ்வாறு ஒரு மாதம் இரவு செய்ய வேண்டும்.-Source:tamil.samayam

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!