படப்பிடிப்பின் போது உயிரை விட்ட பிரபல நகைச்சுவை நடிகர்… அதிர்ச்சியில் திரையுலகம்..!


தவசி படத்தில் “எஸ்க்யூஸ்மி, சாரி ஃபார் த டிஸ்டபென்ஸ், இந்த அட்ரஸ் எங்க இருக்கு கொஞ்சம் சொல்றீங்களா” என்ற ஒற்றை வசனத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஃபேமஸ் ஆனவர் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர் கிருஷ்ணமூர்த்தி. இவர், இன்று காலை குமுளி அருகே வண்டிப்பெரியாரில் நடைபெற்ற ஷூட்டிங்கின்போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த நடிகர் கிருஷ்ணமூர்த்தி, விளம்பர புரெடக்‌ஷன் அசிஸ்டென்ட் மேனேஜராக சினிமாவில் தன் வாழ்க்கையைத் தொடங்கியவர். பின்னர் வடிவேலுவின் குழுவில் இணைந்து சிறிய சிறிய ரோல்கள் செய்து பின்னாள்களில் முக்கிய நகைச்சுவை நடிகராக அசத்தினார்.

இவரும் நடிகர் வடிவேலும் இணைந்து செய்த பல காமெடிகள் அதிக பிரபலமானவை. நடிகர் வடிவேலுவும் கிருஷ்ண மூர்த்தியும் மிகவும் நெருங்கிய நண்பர்கள். `ஃபிரண்ட்ஸ் படத்தில் எனக்கு ஒரு வாய்ப்பு வழங்குவதாக வடிவேலு கூறியிருந்தார். ஏனோ சில காரணங்களால் அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. அதற்குப் பதிலாக அந்த படத்தில் ரமேஷ் கண்ணாவின் பெயரை கிருஷ்ண மூர்த்தி என வைத்தார்” என்று வடிவேலுவுடன் தனக்கு இருந்த நட்பைப் பற்றி ஒரு விகடன் பேட்டியில் கூறியிருந்தார் கிருஷ்ணமூர்த்தி.

நகைச்சுவை மட்டுமில்லாது நான், நான் கடவுள் போன்ற பல படங்களில் சிறந்த குணச்சித்திர நடிகராகவும் நடித்து கவனம் ஈர்த்திருப்பார். நகைச்சுவை சீன்களில் இவர் பேசும் பல வசனங்கள் இன்றும் நெட்டிசன்கள் மத்தியில் பிரபலம். இந்நிலையில், கேரளாவின் குமுளி அருகே நடந்த படப்பிடிப்பு தளத்தில் அவருக்குத் திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக அவர் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அவரை படக்குழுவினர் கொண்டுசென்றனர். ஆனால், மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும் வழியிலேயே அவர் உயிர்பிரிந்தது.-Source: vikatan

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!