திருமண தேதியை அறிவித்த நடிகை பாவனா… எங்கு நடக்க போகிறது தெரியுமா..?


மலையாள நடிகையான இவர் ஏராளமான தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்திருக்கிறார்.

இந்நிலையில், கன்னட திரைப்பட தயாரிப்பாளரான நவீன் என்பவரை காதலித்து வந்தார். இந்த காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம்
தெரிவித்தனர்.


இதனிடையே கடந்த பிப்ரவரி மாதம் இவரை சிலர் கடத்தி பாலியல் ரீதியாக துன்புறுத்திய சம்பவம் மலையாளப் படவுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான வழக்கில் மலையாள நடிகர் திலீப்பும் கைதானார்.

இந்த நிலையில் நவீன்- பாவனா நிச்சயதார்த்தம் நடந்தது. இதையடுத்து டிசம்பர் மாதம் இவர்களது திருமணம் நடைபெறும் என கூறப்பட்டது. ஆனால் சில காரணங்களால் இந்தத் திருமணம் தள்ளிப் போடப்பட்டது.

இதையடுத்து தற்போது ஜனவரி 22-ஆம் தேதி கேரள மாநிலம் திருச்சூரில் நவீன் – பாவனா திருமணம் நடைபெற உள்ளது. இதில் குடும்பத்தார், நெருங்கிய நண்பர்கள் மட்டும் பங்கேற்கின்றனர். அதன் பின்னர் திருவனந்தபுரத்திலும், பெங்களூரிலும் திருமண வரவேற்பு நடைபெறவுள்ளது.-Source: tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!