பிக் பாஸ் வீட்டிற்குள் ஜனனி, ரித்விகா வந்ததற்கு இது தான் காரணமா..?


ஜனனியும் ரித்விகாவும் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்ததற்கு என்ன காரணம் என்பது ப்ரோமோ மூலமாக தெரிய வந்துள்ளது.

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் இன்னும் ஓரிரு வாரங்களில் முடிய உள்ளது.

இந்நிலையில் நேற்று யாஷிகாவும் மஹத்தும் அவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் இவன் தாண்டா உத்தமன் என்ற படத்தின் ப்ரோமோஷனுக்காக உள்ளே நுழைந்திருந்தனர்.

இவர்களை தொடர்ந்து தற்போது ஜனனியும் ரித்விகாவும் உள்ளே சென்றுள்ளனர். இவர்களும் படத்தின் ப்ரோமோஷனுக்காக தான் உள்ளே நுழைந்துள்ளனர்.

ஆம், பா. ரஞ்சித் தயாரிப்பில் அட்டகத்தி தினேஷ் நடிப்பில் உருவாகியுள்ள இரண்டாம் உலக போரின் கடைசி குண்டு என்ற படத்திற்காக தான். இது ப்ரோமோ வீடியோவில் தெரிய வந்துள்ளது.-Source: kalakkal

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!