மனைவியின் உடலை துண்டு துண்டாக வெட்டி கணவன் செய்த விபரீத செயல்!


மனைவி மீதிருந்த சந்தேகத்தினால் கணவரை அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவமானது டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வடமேற்கு டெல்லியை சேர்ந்தவர் அஷு. இவருடைய வயது 31. இவருக்கு 9 ஆண்டுகளுக்கு முன்னர் அதே பகுதியை சேர்ந்த சீமா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இத்தம்பதியினருக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். அஷு கணினிகளை பழுது பார்க்கும் பணி செய்து வந்தார்.

சமீபத்தில் தம்பதியினர் நகர்புறத்தில் ஒரு வாடகை வீட்டில் குடியேறினர். அஷுவுக்கு சீமாவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு வந்தது. சீமா வேறு ஒரு நபருடன் தொடர்பில் இருப்பதாக பலமுறை அவரிடம் அஷு சண்டையிட்டுள்ளார். இதைப் பற்றி பேசும்போதெல்லாம் சீமா தன்னை கொடுமைப்படுத்தியதாக புகார் அளிப்பதாக அஷுவை மிரட்டியுள்ளார்.

சனிக்கிழமையன்று தங்களுடைய சொந்த வீட்டிலிருந்து பொருட்களை எடுத்து வருவதற்காக இருவரும் சென்றனர். அங்கு சீமாவின் நடத்தையில் அஷு சந்தேகம் அடைந்து வாக்குவாதம் நடத்தியுள்ளார். இருவருக்குமிடையேயான தகராறு வெடித்ததில் அஷு சீமாவை கடுமையாக தாக்கினார்.

தன்னிடமிருந்த கத்தியால் சீமாவை குத்தி கொலை செய்தார். சீமாவின் உடலை துண்டு துண்டாக வெட்டி, அவருடைய கை, கால் முதலியவற்றை கழிவுநீர் தொட்டியில் போட்டார். இதர உடல் பாகங்களை கழிவுநீர் கால்வாயில் வீசினார்.

பின்னர் சீமாவின் தாயாருக்கு கால் செய்து, சீமாவை கொலை செய்து விட்டதாக கூறியுள்ளார். பின்னர் காவல் நிலையத்திற்கு தானாகவே சென்று சரணடைந்துள்ளார். பின்னர் காவல்துறையினர் அவர் கூறிய இடத்திற்கு சென்று சீமாவின் உடலை கைப்பற்றினர்.

சீமாவின் தாயார் கூறுகையில், “ஆண் குழந்தையே பிறக்காத வருத்தத்தினால் அஷு சீமாவை கொலை செய்துள்ளார்” என்று கூறினார். இந்த சம்பவமானது டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.-Source: times.tamil

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!