திருமணமான 7 நாளில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்! விழுப்புரம் அருகே பயங்கரம்!


புது தாலியின் வாசம் கூட மறையல.. ஆகி ஒரு வாரமே ஆனநிலையில், சாலை விபத்தில், புதுமணப் பெண் உயிரிழந்த சம்பவம் பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சியை அடுத்த மாதவச்சேரியைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவர் ஒரு என்ஜினியர். இவருக்கும் செம்படாக்குறிச்சியைச் சேர்ந்த பிரியதர்ஷினி என்ற பெண்ணுக்கும் ஒரு வாரத்துக்கு முன்புதான் திருமணம் நடந்தது.

இந்நிலையில், பாலமுருகன், பிரியதர்ஷினி, பிரியதர்ஷினியின் தம்பி சந்தோஷ்.. இவர்கள் 3 பேரும் பைக்கில் கள்ளக்குறிச்சி நோக்கி சென்றுள்ளனர்.

சந்தோஷ் பைக்கை ஓட்டிவர, பின்னாடியே புதுமண தம்பதியும் உட்கார்ந்து சென்றுள்ளனர். அம்மன்நகர் அருகே வந்தபோது, எதிரே மின்னல் வேகத்தில் வந்த பைக் இவர்களது பைக்கில் பலமாக மோதியது. இதில், பிரியதர்ஷினி தூக்கி வீசியெறியப்பட்டு, நடுரோட்டில் போய் விழுந்தார்.

பாலமுருகனும், சந்தோஷும் ரோட்டோரம் விழுந்தனர். இதில் நடுரோட்டில் விழுந்த பிரியதர்ஷினி மீது மின்னல் வேகத்தில் வந்த லாரி அவரது உடல் மீது ஏறியது. இதில் பிரியதர்ஷினி உடல்நசுங்கி உயிரிழந்தார். தகவலறிந்து வந்த போலீசார், படுகாயமடைந்த பாலமுருகன், சந்தோஷ் இருவரையும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து, பிரியதர்ஷினி உடலை மீட்டனர்.

இது சம்பந்தமாக விசாரணை நடத்தியதில், பைக்கில் வந்த 3 பேருமே ஹெல்மட் போடவில்லை என்று சொல்லப்படுகிறது. சாலைவிதிகளை இன்னமும் மீறுவதால், இதுபோன்ற துயர சம்பவம் அடிக்கடி நிகழ்வது வேதனை அளிப்பதாக பொதுமக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!