மனவேதனையால் போலீஸ் விசாரணைக்கு வந்த பெண் விஷம் குடித்தார்

வந்தவாசி அடுத்த கீழ்நமண்டி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது45). இவர் பால் கொள்முதல் செய்து தனியார் கம்பெனிக்கு ஏற்றுமதி செய்து வருகின்றார்.

இவரது மனைவி சரசு(40) கிராமத்தில் உள்ள பெண்களிடம் பால் வாங்கும் பணியை செய்து வருகின்றார். தினந்தோறும் பாலை சரசுவிடம் வழங்கி வந்த பெண் ஒருவர் கடந்த ஒரு மாதங்களாக வழங்காமல் இருந்ததாக கூறப்படுகின்றது. பால் தரமில்லை என சரசு கூறியதால் அந்த பெண் வேறு நபருக்கு பால் வழங்கியுள்ளார். இதனால் அந்த பெண்ணுக்கும் சரசுக்கும் தகாராறு ஏற்பட்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து சரசு தெள்ளார் போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் செய்தார். தெள்ளார் போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் கோவிந்தராஜீலு இருதரப்பையும் போலீஸ் நிலையம் அழைத்து விசாரித்தார். அப்போது சரசு குடும்பத்தினர் சமரசமாக செல்ல சம்மதித்தாக கூறப்படுகின்றது.

இதனால் மனவேதனை அடைந்த சரசு போலீஸ் நிலையம் வெளியே சென்று புடவையில் மறைத்து வைத்து இருந்த விவசாயத்திற்கு பயன்படுத்தும் விஷகொல்லி மருந்தை குடித்தார். அப்போது உடன் இருந்த உறவினர்கள் பாட்டிலை தட்டிவிட்டனர். இதனை தொடர்ந்து உறவினர்கள் உடனடியாக சரசுவை வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு சரசுக்கு சிசிக்கை அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.- Source: maalaimalar


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.