இரு மனைவிகளை தீ வைத்து எரித்த இளைஞர்… அதிர வைத்த காரணம்..!


ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரை சேர்ந்த இளைஞர் தீபா ராம் நேற்று தன்னுடைய இரு மனைவிகளை வெளியே அழைத்து சென்று உள்ளார். மனைவிகள் தாரியா தேவி மற்றும் மாலி தேவிக்கு தங்க நகைகள் வாங்கி தருவதாக கூறி காரில் அழைத்து சென்று உள்ளார். காரில் சென்ற போது அவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.

வாக்குவாதம் செய்துக்கொண்டே தீபா ராம் காரை ஓட்டிஉள்ளார். அப்போது கார் நிலை தடுமாறி உள்ளது. அவருடைய மனைவிகளில் ஒருவர், அவ்வழியாக சென்றவர்கள் உதவியுடன் வெளியே தப்ப முயன்று உள்ளார். ஆனால் தீபா ராம் அவரையும் உள்ளே தள்ளி காரை வேகமாக ஓட்டி சென்று உள்ளார்.

சிறிது தொலைவில் காரை நிறுத்தி அனைத்து கதவுகளையும் மூடிவிட்டு காருக்கு தீ வைத்து உள்ளார்.

இதில் தாரியா தேவியும், மாலி தேவியும் கருகி உயிரிந்தனர் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரும் போலீஸ் இளைஞர் ராமை கைது செய்து உள்ளது. விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையின் போது இரு மனைவிமார்களும் தன்னுடைய தயாரை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளவில்லை என்ற கோபத்தில் இதனை செய்ததாக தீபா ராம் கூறிஉள்ளார். தீபா ராம் குஜராத் மாநிலத்தில் பணியாற்றி வந்து உள்ளார். இவருக்கு இரு மனைவிகளுடன் மூன்று குழந்தைகள் உள்ளது.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!