பிக்பாஸ் மதுவுக்கு நடந்தது என்ன..? டேனியல் பகீர் பேட்டி..!


பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை மதுமிதா, தற்கொலை முயற்சி செய்ததால் கடந்தவாரம் அதிரடியாக வெளியேற்றப்பட்டார். இது தொடர்ந்து விவாதத்திற்கு உள்ளாகி உள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டதற்கான காரணத்தையும், பிக்பாஸ் வீட்டிற்குள் நடந்த சம்பவங்களை பற்றியும், மதுமிதாவை நேரில் சென்று சந்தித்த முன்னாள் போட்டியாளர் டேனியல் தெரிவித்துள்ளார். இது குறித்து டேனியல் கூறியிருப்பதாவது: மதுமிதாவிற்கு என்ன ஆனது என பதறிப் போய், அவரை நேரில் சந்திக்க அனுமதி கேட்டு போன் செய்தேன்.

பிக்பாஸ் நிகழ்ச்சி தயாரிப்பாளரிடம் செய்து கொண்டிருக்கும் ஒப்பந்தப்படி, இப்போதைக்கு எதை பற்றியும் பேச முடியாது. அப்படி பேசினால், என்னுடைய சம்பளம் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும். சிறிது நாட்களுக்கு பின் பேசுவோம் என்றார். இருப்பினும், அவரை சந்திக்க முடிவெடுத்தேன். அவருக்கே தெரியாமல், அவரது வீட்டிற்கு சென்றேன். நான் சென்ற நேரத்தில், அவரது காயத்திற்கு மருத்துவர் ஒருவர் சிகிச்சை அளித்து கொண்டு இருந்தார்.

கையில், மிகவும் ஆழமான காயங்கள் இருந்தது. எனக்கு தெரிந்த வரை சொல்கிறேன், பிக்பாஸ் வீட்டில் நடந்த டாஸ்கின் போது, மதுமிதா, ஏதோ கருத்து சொல்லி இருக்கிறார். அதை மற்ற போட்டியாளர்கள் யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. மேலும், அவர்கள் அனைவரும் சேர்ந்து கொண்டு, மதுவை பயங்கரமாக கலாய்த்துள்ளனர்.

மற்றவர்கள் கிண்டலடித்து, வெறுப்பேற்றியதால் தான், மது, கையை கிழித்துக் கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார். அந்த நேரத்தில் கஸ்தூரி மட்டும் தான் ஈர துணியை எடுத்து, காயத்தை அமுக்கி உதவி செய்துள்ளார். சேரன், மற்ற போட்டியாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சண்டையிட்டுள்ளார். அதனால் தான், மது வெளியேறும் போது, கஸ்தூரி மற்றும் சேரனிடம் மட்டும் தான் பேச விரும்புவதாக கூறியுள்ளார்.இவ்வாறு டேனியல் கூறியுள்ளார்.-Source: dinamalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!