கள்ளக்காதலனுடன் உல்லாசம் – மகளின் கழுத்தை அறுத்துக் கொன்ற தாய்…!


கள்ளக்காதலனோடு உறவில் ஈடுபடுவதை பார்த்த தனது மகளை கொலை செய்த தாயை டில்லி பொலிஸார் கைது செய்துள்ளனர். டில்லி அருகிலுள்ள காஜியாப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முன்னிதேவி (வயது 30). இவரது 6 வயது மகளை கடந்த சில தினங்களுக்கு முன் காணவில்லை என்று உள்ளூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இது குறித்து பொலிஸார் விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து, சிறுமி தனது வீட்டின் அருகில் சடலமாகக் கிடப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்த்தபோது, அவரின் கழுத்து அறுபட்டு கொலை செய்யப்பட்டு கிடப்பதைக் கண்ட பொலிஸார் சிறுமியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதுதொடர்பாக பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்துள்ளனர். விசாரணையின்போது தனது மகளுக்கு யாரோ செய்வினை வைத்து கொலை செய்து விட்டதாக முன்னிதேவி தெரிவித்துள்ளார். மேலும் அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளார்.


இதனால் பொலிஸாருக்கு முன்னிதேவி மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அவரை கண்காணித்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இறுதியில், முன்னிதேவியே தனது மகளை கொன்று நாடகமாடியதை ஒப்புக் கொண்டுள்ளார்.

கொலை குறித்து பொலிஸாரிடம் முன்னிதேவி அளித்த வாக்குமூலத்தில், சம்பவம் நடந்த தினத்தன்று எனது கணவர் அலுவலகத்துக்கு சென்றார். அவர் சென்றதும் எனது கள்ளக்காதலனோடு வீட்டின் மொட்டை மாடியில் உறவில் ஈடுபட்டுக் கொண்டிருந்தேன்.

அப்போது அங்கு வந்த மகள் நான் உறவில் ஈடுவதை பார்த்து விட்டார்.இதை வெளியே யாரிடமும் சொல்லக் கூடாது எனக் கூறினேன்.
ஆனாலும், இந்த விவகாரம் கணவருக்கு தெரிந்து விடக்கூடாது என்பதற்காக பெற்ற மகள் என்றும் பாராமல் எனது காதலருடன் சேர்ந்து காஜலை பிளேடால் கழுத்தை அறுத்துக் கொன்றேன் எனத் தெரிவித்துள்ளார். இதையடுத்து, பொலிஸார் முன்னிதேவி மற்றும் அவரது காதலரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.-Source: metronews

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!