இந்திய ராணுவத்தை இழிவுப்படுத்திய பாகிஸ்தான் ஆபாச நடிகை…!


இந்திய ராணுவத்தை இழிவுப்படுத்தி டுவிட்டரில் விரல் சைகை காட்டிய பாகிஸ்தான் ஆபாச நடிகைக்கு இந்திய ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

காஷ்மீரில் ஊடுருவி நாசவேலை செய்ய முயன்ற பாகிஸ்தான் சிறப்பு படையை சேர்ந்த 7 பேரை நம் ராணுவ வீரர்கள் சுட்டுக் கொன்றனர். வெள்ளைக் கொடியை ஏந்தி வந்து அவர்களின் உடல்களை எடுத்துச் செல்லுமாறு இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்டு இந்தி, கன்னட படங்களில் நடித்தவர் வீணா மாலிக். இந்தி பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர். அவ்வப்போது ஆபாச படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவார்.

அவர் இந்திய ராணுவத்தை விமர்சித்து டுவீட் போட்டுள்ளார். இந்திய ராணுவத்திற்கு ஆபாச சைகை காட்டி புகைப்படம் எடுத்து டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். அதை பார்த்த இந்திய ரசிகர்கள் கொந்தளித்து வீணா மாலிக்கை விளாசி தள்ளியுள்ளனர்.


வீணா மாலிக்கின் படத்துக்கு கீழ் ‘நீங்கள் புகைப்படத்தில் காட்டியுள்ளதை தான் இந்திய ராணுவம் உங்களின் சிறப்பு படையினருக்கு செய்துள்ளது. பட்டாலும் திருந்தாதவர்கள் நீங்கள். உங்களுக்கு வேறு இல்லை என்பது இதன் மூலம் தெரிகிறது’ என கமெண்டுகள் பதிவிட்டு வருகின்றனர்.

வீணா மாலிக் பிக்பாஸ் வீட்டில் நடிகர் அஷ்மித் படேலுடன் நெருங்கி பழகியதை நினைவு கூர்ந்தும், பத்திரிகைக்காக நிர்வாணமாக போஸ் கொடுத்ததையும் விமர்சித்துள்ளனர். ‘உங்களிடம் இருந்து நாகரீகத்தை எதிர்பார்க்க முடியாது. பணம் சம்பாதிக்கும் ஆசையில் மீண்டும் பாலிவுட் பக்கம் வந்துவிடா தீர்கள்’ என்று எச்சரித்துள்ளனர்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!