போதை மருந்து கொடுத்து பல பெண்களை சீரழித்த தந்தையும், மகளும் – அதிர்ச்சி வாக்குமூலம்..!


அரியானா மாநிலத்தின் யமுனா நகரில் இச்சம்பவம் நடந்துள்ளது. அசோக்குமார் என்ற நபர் பெண் ஒருவருடன் நட்பாக பழகிய நிலையில் அவர் வீட்டுக்கு சென்று தனது மகளுக்கு நிச்சயதார்த்தம் ஆகிவிட்டதாக கூறி இனிப்பு வழங்கியுள்ளார்.

இனிப்பை அப்பெண் சாப்பிட்ட நிலையில் மயங்கி விழுந்துள்ளார், இதையடுத்து அவரை அசோக்குமார் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதை அருகிலிருந்த அசோக்குமாரின் மகள் வீடியோவாக எடுக்க மயக்கம் தெளிந்த பெண்ணிடம் தந்தையும், மகளும் வீடியோவை காட்டி பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் அளிக்க அசோக்குமாரையும் அவர் மகளையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

இதனிடையில் இதே போன்று தங்களிடமும் அசோக்குமார் செய்தார் என மேலும் இரண்டு பெண்கள் புகார் அளித்துள்ளனர்.இதையடுத்து போலீசார் அசோக்குமார் மற்றும் அவர் மகளிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!