தன் கணவர் மீது பாலியல் குற்றசாட்டை கூறியதால் சேரனின் மனைவி அவரை சந்தித்து பளாரென அறைந்ததாக ஒரு தகவல் வைரலாகி வருகிறது.
கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் வெளியேற்றப்பட்டவர் மீரா மிதுன்.
இவர் சேரன் மீது அபாண்டமாக பாலியல் குற்றசாட்டை முன்வைத்ததே இதற்கான காரணமாக இருந்தது.
பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியதும் வழக்கம் போல கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார் மீரா மிதுன். நேற்று கூட விஜய் டிவியின் ட்விட்டர் பக்கத்தில் நேரலையில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து இருந்தார்.
இந்நிலையில் சேரனின் மனைவி மீரா வெளியேற்றப்பட்டதும் அவரை நேரில் சந்தித்து பேசியதாகவும் அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தால் மீராவை சேரன் மனைவி அறைந்ததாகவும் ஒரு தகவல் வைரலாக தொடங்கியுள்ளது.
ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பது சரியாக தெரியவில்லை. இது வெறும் வதந்தியாகவும் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.-Source: kalakkal
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!