பிக் பாஸ் 3யின் இன்றைக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் வீட்டில் வனிதா மற்றும் மீரா மிதுன் வெளியேறிய பின்னர் போட்டியாளர்கள் அமைதியாக உள்ளனர். இருப்பினும் கவின், சாக்சி இடையே உள்ள காதல் சண்டை மட்டும் அடிக்கடி பூகம்பம் போல் வெடிக்கிறது. இதனால் இருவருக்கும் இடையே உள்ள உறவு விரிசல் அடைந்து இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
அதைத்தொடர்ந்து இன்றைக்கு மொட்ட கடுதாசி டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் மனதில் இருக்கும் கேள்வியை எழுதி பாக்ஸில், பெயர் எழுதாமல் போட வேண்டும் என்று பிக் பாஸ் உத்தரவிட்டார்.
அதில் முதல் ஆளாக சென்ற லாஸ்லியா, ‘எனக்கும் கவினுக்கும் இடையே இருக்கும் பிரின்ட் ஷிப் குறித்து எங்களுக்கு தெரியும். அதை நான் ஒரு ஒருத்தவங்களா கூப்பிட்டு சொல்ல வேண்டும் என்ற அவசியம் எனக்கு இல்லை’ என்றார்.
அதற்குள் இடையில் சாக்ஷி பேசியதால் கடுப்பான லாஸ்லியா, ‘நான் உங்களக்கு சொல்லல, உங்ககிட்ட வந்து எனக்கு தனிய சொல்ல எனக்கு விருப்பம் இல்ல. அதுனால சொல்ல’ என்று மிகவும் ஆட்டிட்யூட்டாக பேசிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்து செல்கிறார். இதை பார்த்த மற்ற ஹவுஸ் மேட்ஸ் வழக்கம் போல் எதுவும் பேசாமல் வாயை மூடிக்கொண்டு அமர்ந்துள்ளனர்.-Source: top.tamil
#Day38 #Promo2 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/4vJZ8Z7omX
— Vijay Television (@vijaytelevision) July 31, 2019
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!